இரண்டாவது காலாண்டு நிதி அறிக்கை ‘இன்போசிஸ்’ நிறுவன நிகர லாபம் ரூ.3,726 கோடியாக அதிகரிப்புஇரண்டாவது காலாண்டு நிதி அறிக்கை ‘இன்போசிஸ்’ நிறுவன நிகர லாபம் ரூ.3,726 ... ... ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.65.15 ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.65.15 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய வரலாறு படைத்தன இந்திய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2017
10:21

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்றில் இன்று(அக்., 25) புதிய சாதனை நிகழ்ந்துள்ளன. முதன்முறையாக சென்செக்ஸ் 33 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 10,300 புள்ளிகளையும் கடந்துள்ளது.

வாராக் கடன்களால் திணறிவரும் வங்கிகளுக்கு புத்துயிரூட்டும் வகையில், 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதுதவிர உள்கட்டமைப்பிற்கும் ரூ.6.92 லட்சம் கோடியை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் அதிகளவில் ஏற்றம் கண்டன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 509.99 புள்ளிகள் உயர்ந்து 33,117.33-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 132.85 புள்ளிகள் உயர்ந்து 10,340.55-ஆகவும் வர்த்தகமாகின.

முன்னதாக சென்செக்ஸ் 32,699.86 மற்றும் நிப்டி 10,251.85 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காலை 10 மணியளவில் அந்த சாதனை சரிந்து, சென்செக்ஸ் 32,855 புள்ளிகளிலும், நிப்டி 10,256 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.

இன்றைய வர்த்தகத்தில், பொதுத்துறை நிறுவன வங்கிகள், பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஐஓபி., ஐடிபிஐ., ஆந்திரா வங்கி, யூகோ வங்கி உள்ளிட்ட வங்கிகளின் பங்குகளும், உள்கட்டமைப்பு தொடர்பான நிறுவன பங்குகளான எல் அண்ட் டி, என்ஹெச்பிசி., ஹெச்சிசி, என்சிசி போன்றவைகள் அதிக ஏற்றம் கண்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)