பதிவு செய்த நாள்
26 அக்2017
00:46
புதுடில்லி : இந்திய ரிசர்வ் வங்கி, குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க கரன்சியான, டாலரை வாங்கி வருவதால், அதன் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாக, அமெரிக்க கருவூல துறை தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், ‘ரூபாய் மதிப்பு உயர்வுக்கு, எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை’ என, தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, ரூபாய் மதிப்பில் அதிக ஏற்ற, இறக்கம் உண்டாகும் போது மட்டுமே, சந்தையில் தலையிடுவதாக கூறியுள்ளது. இந்தாண்டு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 4.3 சதவீதம் உயர்ந்துள்ளது. 2010க்கு பின், இந்த அளவு அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஒரு டாலர் 64.89 ரூபாய் ஆக உள்ளது.
ஒரு நாடு, கரன்சி சந்தையில் தொடர்ந்து தலையிட்டாலோ, அமெரிக்கா உடனான வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு உபரியாக இருந்தாலோ, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும். இதன்படி, அமெரிக்க கருவூலத்தின் கண்காணிப்பு வளையத்தில், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய, ஐந்து நாடுகள் உள்ளன.இந்த பட்டியலில், இந்தியாவை, அமெரிக்கா சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|