பதிவு செய்த நாள்
26 அக்2017
00:48
பெங்களூரு : ‘‘நான் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு, ‘இன்போசிஸ்’ இயக்குனர் குழு, இன்னும் பதில் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது,’’ என, அதன் நிறுவனர், நாராயணமூர்த்தி தெரிவித்து உள்ளார்.
நேற்று முன்தினம், நந்தன் நிலேகனி தலைமையில் கூடிய, இன்போசிஸ் இயக்குனர் குழு, ‘பனாயா நிறுவனத்தை கையகப்படுத்தியதில், எந்த முறைகேடும் நடைபெறவில்லை’ என, தெரிவித்தது.
இதையடுத்து, நாராயணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: நான் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. குறிப்பாக, பனாயா நிறுவனத்தை, 20 கோடி டாலருக்கு கையகப்படுத்தியதில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் அது தொடர்பான ஆய்வறிக்கை முழுவதையும் வெளியிடும்படி கேட்டிருந்தேன்; அதை, இயக்குனர் குழு வெளியிடவில்லை.
மேலும், முன்னாள் தலைமை நிதி அதிகாரி, ராஜிவ் பன்சாலுக்கு, இதுவரை இல்லாத அளவிற்கு, 1,000 சதவீதம் கூடுதல் தொகை கொடுத்து, பணியில் இருந்து வெளியேற்ற, இயக்குனர் குழு அனுமதித்தது எப்படி; அதற்கான காரணம் என்ன? என்பது உள்ளிட்ட, பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இது, எனக்கு ஏமாற்றமாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|