பதிவு செய்த நாள்
26 அக்2017
00:49
புதுடில்லி : அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், நவம்பர் மாதத்துடன், ‘2ஜி’ மொபைல் போன் சேவையை நிறுத்த உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிறுவனம், 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், இக்கடனில், பெரும்பகுதி திரும்ப தரப்படும் என, இந்நிறுவனம், கடன் அளித்த வங்கிகளிடம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் இந்நிறுவனம், ஏர்செல் நிறுவனத்துடன் மேற்கொண்டு வந்த இணைப்பு முயற்சி கைவிடப்பட்டதாக அறிவித்தது.
‘அரசு துறைகள், ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் தான், இணைப்பு முயற்சி கைவிடப்பட்டதற்கு காரணம்’ என, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்திருந்தது. இணைப்பு திட்டம் நிறைவேறினால், 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் குறையும் என, இந்நிறுவனம் எதிர்பார்த்தது; இது, தற்போது பொய்த்துப் போனது.
இத்தகைய சூழலில், நேற்று முன்தினம், உரிமம் காலாவதி ஆனதால், ‘டி.டி.எச்.,’ சேவையை நிறுத்துவதாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிவித்தது. தற்போது, இந்நிறுவனம், ‘2ஜி’ மொபைல் போன் சேவையை, அடுத்த மாத இறுதியில் நிறுத்த உள்ளதாகவும், அதே சமயம், லாபகரமான, ‘4ஜி’ உள்ளிட்ட, இதர சேவைகளை தொடர உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து, ஏராளமான ஊழியர்களை பணியில் இருந்து விலகும்படி, ரிலையன்ஸ் கம்யூ., கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக எந்த விபரங்களையும், அந்நிறுவனம் வெளியிடவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|