சுலபமாக தொழில் துவங்கும் வசதி: இந்தியா முன்னேற வாய்ப்புசுலபமாக தொழில் துவங்கும் வசதி: இந்தியா முன்னேற வாய்ப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு ...
ஜி.எஸ்.டி.,யால் நுகர்வோருக்கு அதிக பயன்: பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2017
23:48

புது­டில்லி : ‘‘ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி­யால், நீண்ட கால அடிப்­ப­டை­யில், நுகர்­வோர் அதிக பயன் பெறு­வர்,’’ என, பிர­த­மர் மோடி தெரி­வித்து உள்­ளார்.


அவர், டில்­லி­யில், கிழக்கு, தெற்கு மற்­றும் தென்­கி­ழக்கு ஆசிய நாடு­களின், சர்­வ­தேச நுகர்­வோர் பாது­காப்பு மாநாட்டை துவக்கி வைத்து, மேலும் பேசி­ய­தா­வது: நுகர்­வோ­ரின் எதிர்­பார்ப்­பு­களை, எப்­படி பூர்த்தி செய்­வது என்­பது குறித்து விவா­திக்க உள்­ள­தால், இந்த மாநாடு மிகுந்த முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது. நுகர்­வோர் பாது­காப்பு என்­பது, ஒரு நாட்­டின் நிர்­வா­கத்­தில், பிரிக்க முடி­யாத அங்­க­மா­கும்.


வேத நுால்களில் கூட, நுகர்­வோர் பாது­காப்பு வலி­யு­றுத்­தப்­பட்டு உள்­ளது. உரு­வாக்­கப்­படும் புதிய நுகர்­வோர் பாது­காப்பு சட்­டத்­தில், பெரு­ம­ளவு, நுகர்­வோ­ருக்கு சுயா­தி­கா­ரம் அளிக்­கும் அம்­சங்­கள் இடம் பெறும். தவ­றாக வழி­ந­டத்­தும் விளம்­ப­ரங்­க­ளுக்­கான விதி­மு­றை­கள், கடு­மை­யாக இருக்­கும்.


புதிய இந்­தி­யாவை உரு­வாக்­கு­வ­தற்­கான, நம் தொலை­நோக்கு பார்வை விசா­ல­மா­னது. அதில், நுகர்­வோர் பாது­காப்பு என்ற அம்­சத்தை தாண்டி, மிகச் சிறந்த நுகர்­வோர் செயல்­மு­றை­கள் மற்­றும்நுகர்­வோர் வளம் என்ற அம்­சங்­களை முன்­னெ­டுத்­துச் செல்ல விரும்­பு­கி­றோம்.நுகர்­வோ­ருக்கு அதிக அதி­கா­ரம் அளிப்­பது; அவர்­கள், தொல்­லை­யின்றி பொருட்­கள் வாங்­கு­வதை உறு­திப்­ப­டுத்­து­வது ஆகி­யவை, அர­சின் இலக்­கா­கும். இதை, நுகர்­வோ­ருக்கு வளம் சேர்க்­கும் வகை­யில், மாற்­றிக் காட்­டு­வோம்.


ஜி.எஸ்.டி., நிறு­வ­னங்­க­ளி­டையே போட்­டியை அதி­க­ரிக்­கும். இதன் விளை­வாக, பொருட்­கள் விலை குறை­யும்.இத­னால், ஏழை மற்­றும் நடுத்­தர வர்க்­கத்­தைச் சேர்ந்த நுகர்­வோர், அதி­க­ள­வில் பயன் பெறு­வர்.ஜி.எஸ்.டி., பல்­வேறு மறை­முக வரி­களை ஒழித்து கட்­டி­யது. சரக்கு மற்­றும் சேவை வரி­யில், அதிக அள­வி­லான பயன்­கள், மத்­திய வர்க்­கத்­தைச் சேர்ந்த நுகர்­வோ­ருக்கு கிடைக்­கும்.


ஒரு ஜன­நா­யக நாட்­டில், வலு­வான குறை தீர்ப்பு நடை­மு­றை­கள் முக்­கி­ய­மா­னவை. அத­னால், நாங்­கள் தொழில்­நுட்­பத்தை ஒருங்­கி­ணைத்து, வலு­வான குறை தீர்ப்பு நடை­மு­றை­களை உரு­வாக்கி வரு­கி­றோம். இது, நுகர்­வோர், தங்­கள் பிரச்­னை­க­ளுக்கு உட­ன­டி­யாக தீர்வு காணும் வகை­யில் இருக்­கும்.மத்­திய அர­சின், பல்­வேறு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­க­ளால், பண­வீக்­கம் கட்­டுக்­குள் உள்­ளது. இத­னால், நுகர்­வோ­ரின்செலவு மிச்­ச­மா­கிறது.


கிரா­மப்­புற நுகர்­வோ­ரி­டையே, ‘டிஜிட்­டல்’ தொழில்­நுட்ப பயன்­பாட்டை அதி­க­ரிக்க, மத்­திய அரசு தீவிர முயற்சி மேற்­கொண்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)