பதிவு செய்த நாள்
27 அக்2017
23:38
சென்னை : பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான, இந்துஸ்தான் பிரிபேப் நிறுவனத்தின், அனைத்து பங்குகளையும் விற்கும் நடவடிக்கையை, மத்திய அரசு துவக்கிஉள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், குறைந்த செலவில், கட்டுமான பொருட்களை தயாரிக்க, 1948ல், பல்வேறு ஆலைகள் பொதுத் துறை நிறுவனங்களாக துவக்கப்பட்டன. இந்நிறுவனங்கள், 1958ல், இந்துஸ்தான் பிரிபேப் நிறுவனத்தில் ஒன்று சேர்க்கப்பட்டன. பிரிகாஸ்ட் எனப்படும், முன் தயாரிப்பு கட்டுமான தொழில்நுட்பத்தில், கட்டடங்களுக்கான பாகங்களை தயாரிப்பது,
இந்நிறுவனத்தின் அடிப்படை பணியாகும். மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், குறைந்த விலை கட்டுமானங்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பாக, இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் ஏற்பட்ட வருவாய் முரண்பாடுகளை சீரமைக்க, 2008ல், மத்திய அரசு, 128 கோடி ரூபாயை வழங்கியது. இந்நிலையில், இந்நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்துஸ்தான் பிரிபேப் நிறுவனத்தின், 1.34 கோடி பங்குகள், சந்தை போட்டி நிலவரப்படி விற்பனை செய்யப்படும். இதற்கான பணிகள், நவ., 9க்குள் முடிக்கப்படும். இதற்கான வழிகாட்டி முகவராக, யெஸ்பேங்க் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|