பதிவு செய்த நாள்
27 அக்2017
23:40
புதுடில்லி : ‘பொதுத் துறை வங்கிகளுக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய் மறு பங்கு மூலதனம் மேற்கொள்ளும், மத்திய அரசின் திட்டம் மூலம், ரூபாய் மதிப்பு உயர வாய்ப்புள்ளது’ என, ‘மார்கன் ஸ்டான்லி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் வங்கி ஊக்குவிப்பு திட்டத்தால், வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரிக்கும். இது, தனியார் துறையில் முதலீடு மற்றும் விரிவாக்க திட்டங்கள் பெருக வழிவகுக்கும். இத்தகைய செயல்பாடுகள் மூலம், நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்; பங்குச் சந்தைகளில், அன்னிய முதலீடுகள் பெருகும். இதன் காரணமாக, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயரும். வளரும் நாடுகளிடையே, இந்திய ரூபாயின் தனித்துவ மதிப்பு, தொடர்ந்து உயர் நிலையிலேயே நீடிக்கும்.
வங்கி ஊக்குவிப்பு திட்டத்தால், நாட்டின் நிதிப் பற்றாக்குறை இலக்கு மற்றும் பணவீக்கத்தில், எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே சமயம், அரசின் நடவடிக்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். 2018 – 19ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.5 சதவீதமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|