ஒரே மாதத்தில் ரூ.19,000 கோடியை தாண்டியது - மின்னணு வணிக நிறுவனங்கள் விற்பனையில் புதிய சாதனைஒரே மாதத்தில் ரூ.19,000 கோடியை தாண்டியது - மின்னணு வணிக நிறுவனங்கள் ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.89 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.89 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2017
01:03

தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான நிப்டி, கடந்த வாரம், 242 புள்­ளி­கள் உயர்ந்து, புதிய வர­லாற்று உச்­சத்தை அடைந்­தது. அதா­வது 10,366 புள்­ளி­களை எட்­டி­யது.

மத்­திய அரசு பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு அறி­வித்த ஊக்­கு­விப்பு திட்­டம் மற்­றும் சர்­வ­தேச சந்­தை­களில் ஏற்­பட்ட வளர்ச்சி போன்­றவை கார­ண­மாக, நம் சந்­தை­யில் இந்த ஆண்டு முழு­வ­தும் உய­ரும் போக்கு காணப்­ப­டு­கிறது. அமெ­ரிக்க அதி­பர், டொனால்டு டிரம்ப் கொண்டு வர உள்ள, தனி­ந­பர் மற்­றும் நிறு­வ­னங்­கள் மீதான வரி குறைப்பு, அந்­நாட்­டின் வளர்ச்­சிப் பாதைக்கு உத­வும் என்ற எதிர்­பார்ப்பு கார­ண­மாக, பங்­குச் சந்தை உயர்வை கண்டு வரு­கிறது.

ஐரோப்­பிய மத்­திய வங்கி, தன் கரு­வூ­லங்­கள் மூலம், 30 மில்­லி­யன் யூரோவை கொள்­மு­தல் செய்ய உள்­ளது. பேங்க் ஆப் இங்­கி­லாந்து, நிதி­நிலை கூட்­டத்தை நவம்­பர் 2ம் தேதி நடத்த உள்­ளது. அதில் வட்­டி­வி­கி­தம் மாற்­றம் காண வாய்ப்­பு குறைவு. கடந்த வாரம் வெளி­வந்த, இரண்­டாம் காலாண்டு நிதி அறிக்­கை­களில், தனி­யார் வங்­கி­யான, யெஸ் பேங்க் மற்­றும் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆகி­ய­வற்­றின் அறிக்­கை­கள் ஏமாற்­றத்தை அளித்­தன. வரும்­ நாட்­களில், மீதம் உள்ள நிறு­வ­னங்­களின், இரண்­டாம் காலாண்டு நிதி அறிக்­கை­கள் வெளி­வர உள்ளன. அவை, சந்­தை­யின் போக்­கினை நிர்­ண­யிக்­கும்.

பொதுத் துறை வங்­கி­களை மேம்­ப­டுத்த, மத்­திய அரசு, 2.11 லட்­சம் கோடி ரூபாயை ஒதுக்­கி­யுள்­ளது. அரசு கரு­வூல முத­லீட்டு கடன் பத்­தி­ரங்­கள் வெளி­யீடு மூல­மாக, 1.35 லட்­சம் கோடி ரூபாய் திரட்­டப்­பட இருக்­கிறது. இதன் மூல­மாக வங்­கி­கள் பலம் பெறும் என­வும், அதன் நட­வ­டிக்­கை­கள் சீர­மைக்­கப்­படும் என­வும் எதிர்­பார்ப்­பு­கள் எழுந்­த­தால், அதன் கார­ண­மாக, பங்­கு­களின் விலை, ஒரே நாளில், 30 முதல், 40 சத­வீ­தம் அள­வுக்கு உயர்ந்­தது.

வரும் நாட்­களில் சந்­தை­யின் போக்கு சாத­க­மாக இருக்­கும் என கரு­தப்­ப­டு­கிறது. வரும் வெள்­ளி­யன்று, அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் புதிய தலை­வர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட உள்­ளார். மேலும், செப்­டம்­பர் மாதத்­துக்­கான என்.எப்.பி., எனப்­படும், புதிய தொழி­லா­ளர்­கள் சேர்க்கை விபரம் வெளி­வர உள்­ளது. இதன் முடி­வு­களும் சந்­தை­யில் எதி­ரொ­லிக்­கும்.நிப்­டி­யைப் பொறுத்­த­வரை, இந்த வாரம் அதற்­கான ரெசிஸ்­டென்ஸ், 10,390 மற்­றும் 10,500 ஆகும். சப்­போர்ட், 10,125 மற்­றும் 10,035 ஆகும்.

கவ­னிக்க வேண்­டிய பங்­குகள்:
அட்­வான்ஸ்டு என்­சைம்ஸ், செய்ல், மிண்டா கார்ப், பிரி­சம் சிமென்ட், சின்­டெக்ஸ் பிளாஸ்­டிக்ஸ் டெக்­னா­லஜி

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)