ஒரே மாதத்தில் ரூ.19,000 கோடியை தாண்டியது - மின்னணு வணிக நிறுவனங்கள் விற்பனையில் புதிய சாதனைஒரே மாதத்தில் ரூ.19,000 கோடியை தாண்டியது - மின்னணு வணிக நிறுவனங்கள் ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.89 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.89 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அரசியலும், முதலீட்டு முடிவுகளும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2017
01:07

பொதுத் துறை வங்­கி­களின் பங்­கு­களில், இந்த வாரம் நாம் கண்ட விலை உயர்வு, அனை­வ­ரின் வியப்­பை­யும் சம்­பா­தித்து விட்­டது. யாரும் சமீப கால­மாக வாங்­காத பங்­கு­கள் இவை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இவற்றை வாங்­கு­வ­தில் எந்த லாப­மும் இல்லை என்­பதே, சந்­தை­யில் பெரு­வா­ரி­யான முத­லீட்­டா­ளர்­களின் ஒரு­மித்த கருத்­தாக இருந்­தது. ஆகவே, முற்­றி­லும் புறக்­க­ணித்த நிலை­யில் இருந்­தன பொதுத் துறை வங்கி பங்­கு­கள். அத்­த­கைய சூழ­லில் வந்­தது இந்த சூறா­வளி விலை நகர்வு.

முத­லீட்­டா­ளர்­கள் சற்­றும் எதிர்­பா­ராத வித­மாக சந்தை நகர்­வு­கள் அமை­வது புதி­தல்ல. இது தொடர்ந்து நடக்­கும் என்­பதே சந்தை பற்­றிய நம் உறு­தி­யான புரி­த­லாக இருக்க வேண்­டும். ஆனால், ஒவ்­வொரு சந்தை நகர்­வி­லும் புதிய புரி­தல்­களும், பழைய புரி­தல்­களின் நினை­வூட்­ட­லும் தொடர்ந்து ஏற்­படும். இதை, சந்தை நமக்கு புகட்­டும் தொடர் பாட­மாக எடுத்­துக்­கொள்ள வேண்­டும்.பொதுத் துறை வங்­கி­களில் நாம் எதிர்­கொள்­ளும் வாராக் கடன் சார்ந்த சவால்­கள் மகத்­தா­னவை. அரசு இந்த சவால்­களை எதிர்­கொள்­வதை தவிர வேறு வழி­யில்லை என்­பது அனை­வ­ரும் அறிந்­ததே.

ஆனால், அரசு மீதும், நம் வங்கி அமைப்பு சார்ந்­தும் நாம் ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளும் நோக்­கும், புரி­த­லும் அர­சி­யல் பார்வை சார்ந்­த­தாக அமை­வது இயற்கை. அர­சி­யல் பார்­வை­யோடு பொரு­ளா­தார சிக்­கல்­களை அணு­கும் போது, நம் முத­லீட்டு முடி­வு­களில் அர­சி­யல் புகுந்­து­வி­டு­கிறது. இது தவிர்க்க வேண்­டிய நிகழ்வு.வங்­கி­யின் வாராக் கடன் சார்ந்த நடத்­தையை, தொழில் ரீதி­யாக அள­விட வேண்­டும். அப்­படி அணு­கி­னால் மட்­டுமே, நம்­மால் முத­லீட்டு முடி­வு­களை நிதா­ன­மா­க­வும், சாதுர்­ய­மா­க­வும் எடுக்க முடி­யும்.

பெரு­வா­ரி­யான முத­லீட்­டா­ளர்­கள் பொதுத் துறை வங்­கி­களில் முத­லீடு செய்­வதை தவிர்த்­தனர். ஆகவே, அந்த வங்­கி­க­ளுக்கு அரசு மீண்­டும் முதல் கொடுக்­கும் முடிவை அறி­வித்­த­வு­டன், சந்தை அவற்­றின் பங்கு விலையை ஒரே நாளில், 25 முதல், 40 சத­வீ­தம் வரை உயர்த்­தி­விட்­டது. ஆக, அரசு அறி­விப்பு வெளி­யான பின், குறைந்த விலை­யில் முத­லீடு செய்­யும் வாய்ப்பு யாருக்­கும் கிடைக்­க­வில்லை. இரண்டே நாட்­களில் விலை உயர்ந்து, அவற்­றில் ஏற்­க­னவே முத­லீடு செய்­தோர் மட்­டுமே இந்த அறி­விப்­பின் பலனை பெற முடிந்­தது.இந்த நிகழ்வு, ஒன்றை மட்­டுமே தெளி­வாக அறி­வு­றுத்­து­கிறது. சந்­தை­யில் நாம் கையெ­டுக்­கும் முத­லீட்டு முடி­வு­கள், அர­சி­யல் மற்­றும் பொரு­ளா­தார நிகழ்­வு­களை எதிர்­பார்த்து, முன்­கூட்­டியே அமைய வேண்­டும்.

அப்­படி அமைந்­தால் மட்­டுமே, முக்­கிய பொரு­ளா­தார நிகழ்­வு­களில் நாமும் பங்­கு­பெற முடி­யும். அறி­விப்பு வெளி­வந்த பின்பு, நாம் சந்­தை­யில் பங்கு வாங்க அவ­ச­ரம் காட்­டு­வதை தவிர்த்து, பங்கு ஆய்­வு­களில் நம் முழு கவ­ன­மும் செலுத்த வேண்­டும். இப்­போது அறி­விப்பு மட்­டுமே வெளி­வந்து உள்­ளது. ஆய்­வு­கள் மட்­டுமே அறி­விப்­பு­களின் முழு தாக்­கத்­தை­யும், கொள்கை முடி­வு­களின் முன்­ந­கர்­வை­யும் நமக்கு தெளி­வு­ப­டுத்­தும். அந்த தெளி­வு­டன் நம் வருங்­கால முத­லீட்டு முடி­வு­களை எடுப்­பது இப்­போது அவ­சி­ய­மா­கிறது.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)