பதிவு செய்த நாள்
31 அக்2017
05:25
புதுடில்லி : ‘ரிசர்வ் வங்கி, டிச., 6ல் வெளியிட உள்ள நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கு வழங்கும், குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது’ என, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் தெரிவித்துள்ளது.இது குறித்து, இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:சில்லரை பணவீக்கம், செப்டம்பரை போல, அக்டோபரிலும், 3.3 சதவீதம் என்ற அளவில், அதிக மாற்றமின்றி நீடிக்கும் என, தெரிகிறது. நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதத்திற்குள் இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. மத்திய அரசு, வங்கிகளுக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய், மறுபங்கு முதலீடு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரிக்கும்.இதன் தாக்கத்தால், 2018 ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், தொழில் துறை சுறுசுறுப்பு அடையும். இதை கருதி, ரிசர்வ் வங்கி, டிச., 6ல் வெளியிடும் நிதிக் கொள்கையில், ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் குறைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|