பதிவு செய்த நாள்
01 நவ2017
04:50
கோல்கட்டா : பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், இன்று, பொது பங்கு வெளியீட்டுக்காக சந்தைக்கு வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் விரைவில், ஒரு நபர் பணியாற்றும், ‘மைக்ரோ’ அலுவலகங்களை, அதிகளவில் துவக்க திட்டமிடுகிறது.இது குறித்து, இந்நிறுவனத்தின் பொது மேலாளரும், நிதி ஆலோசகருமான, சி.நாறும்பூநாதன் கூறியதாவது:தற்போது, நாடு முழுவதும், எங்களுக்கு, 1,000 அலுவலகங்கள் உள்ளன. மேலும், 1,339 மைக்ரோ அலுவலகங்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், 200 மைக்ரோ அலுவலகங்களை துவக்க திட்டமிட்டு உள்ளோம்.கடந்த நிதியாண்டில், எங்கள் நிறுவனம், 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் செய்துள்ளது. குறிப்பாக, மருத்துவம், தீ மற்றும் வாகன காப்பீடுகளில், முன்னணியில் இருக்கிறோம். பயிர் காப்பீட்டில், இயற்கையின் நிலையற்ற சூழல் காரணமாக, சற்று குறைவாக இருக்கிறோம். நிறுவனத்தின் மொத்த வணிகத்தில், பயிர் காப்பீடு, 6 சதவீதம் அளவுக்கு உள்ளது.நிறுவனத்தின், 15 சதவீத பங்கு விலக்கலை பொறுத்தவரை, 3 சதவீதம் புதிய பங்குகளாகவும், 12 சதவீதம், அரசின் வசம் இருப்பதாகவும் இருக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளில், மேலும், 10 சதவீதம் அளவுக்கு, பங்கு விலக்கல் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|