பதிவு செய்த நாள்
01 நவ2017
04:51
புதுடில்லி : மக்கள், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, சாதாரண பல்புகளுக்கு பதிலாக, எல்.இ.டி., பல்புகளுக்கு, மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது. இந்நிலையில், தர நிர்ணய சட்டங்களுக்கு புறம்பாக, தரமற்ற; பாதுகாப்பற்ற பல்புகள், அதிகளவில் தயாரிக்கப்படுவதாக, ‘நீல்சன்’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.பல்புகள் தயாரிக்கும், 76 சதவீத பிராண்டுகள், எல்.இ.டி., பல்புகளை தயாரித்து வருவதாகவும், அவற்றில், 71 சதவீத நிறுவனங்கள், பாதுகாப்பு தரம் எதையும் பின்பற்றவில்லை எனவும், நீல்சன் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதற்காக, நான்கு பெரிய நகரங்களில், 200 சில்லரை விற்பனை கடைகளில், இந்த ஆய்வை, நீல்சன் மேற்கொண்டது.இது குறித்து, பல்புகள் மற்றும் விளக்குகளுக்கான உற்பத்தியாளர்கள் சங்கமான, ‘எல்கோமா’ தலைவர், ராகேஷ் ஜுட்ஷி, ‘‘இந்திய, எல்.இ.டி., பல்புகள் சந்தை, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. ‘‘அரசின் ஆதரவால், அடுத்த சில ஆண்டுகளில், மொத்த விளக்குகள் சந்தையின் பெரும்பகுதியை, எல்.இ.டி., பல்புகள் பிடித்துவிடும். எனவே, தரமற்ற தயாரிப்பாளர்கள் மீது, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என, கோரிக்கை வைத்துள்ளார்.‘பிலிப்ஸ் லைட்டிங் இந்தியா’ நிறுவனத்தின் துணைத் தலைவர், சுமிச் ஜோஷி, ‘‘தரமற்ற தயாரிப்புகளால், நுகர்வோருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதோடு, உரிய, ஜி.எஸ்.டி., கட்டாமல், அரசுக்கு வரி வருவாய் இழப்பையும், இத்தகைய நிறுவனங்கள் ஏற்படுத்துகின்றன.‘‘எனவே, அரசு, இதில் உடனே தலையிட்டு, தரமற்ற மற்றும் பிராண்டுகள் அல்லாத தயாரிப்புகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என, கேட்டுக் கொண்டு உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|