பதிவு செய்த நாள்
01 நவ2017
04:52
புதுடில்லி : உலகளவில், தொழில் துவங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா, 30 இடங்கள் முன்னேறி, முதல், 100 இடங்களுக்குள் வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது, நிறைவேறி இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும், உலக வங்கி, தொழில் துவங்குவதற்கு, எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலை வெளியிடுகிறது. கடந்த ஆண்டில் வெளியான, 190 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா, 130வது இடத்தில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு பட்டியலில், 131வது இடத்தில் இருந்தது. 2004ம் ஆண்டில் 142 வது இடத்தில் இருந்தது.ஜி.எஸ்.டி.,ஓராண்டில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு மேற்கொண்ட, மூன்று முக்கிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், முதல், 100 இடங்களுக்குள், இந்தியா வந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளதாக, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு, அவர்கள் பல்வேறு காரணங்களைஅடுக்குகின்றனர்.ஜூலை முதல் அமல்படுத்தப்பட்டு வரும், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, இதுவரை இருந்த, குழப்பமான பலமுனை வரி விதிப்பு முறையில் இருந்து, முற்றிலும் மாறுபட்டு, மிகவும் எளிமையாக்கப்பட்டு உள்ளது.திவால் சட்டம்நாடெங்கும் ஒரே சீரான, ஒற்றை வரி விதிப்பு முறையாலும், தேவையற்ற அரசாங்க தலையீடுகள் குறைவதாலும், ஏராளமான வெளிநாட்டுமுதலீட்டாளர்களும், நிறுவனங்களும், இந்தியாவுக்குள், தம் வர்த்தக நடவடிக்கைகளை துவங்க காத்துக் கொண்டு இருக்கின்றன.அடுத்து, புதிய திவால் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு பின், இந்தியாவின் பலம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில், நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் முதலீடுகள் ஏதேனும், ஒரு வகையில் பாதிப்பு அடையுமானால், அதிலிருந்து மீள்வதற்கு, புதிய திவால் சட்டம் உதவும் என்பது, முதலீட்டாளர்கள் நம்பிக்கை.அடுத்ததாக, கட்டட அனுமதி பெறுவது முதல், தொழில் துவங்க தேவைப்படும்,பல்வேறு அனுமதிகளைபெறுவதற்கான வழிமுறைகள், மத்திய அரசின், வர்த்தகத் துறை அமைச்சகத்தால், மிகவும்எளிமைப்படுத்தப்பட்டுஉள்ளது.இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் பதிவு செய்து கொள்வதும், தொழில் துவங்குவதும் விரைவாகநடைபெறும்.எதிர்பார்ப்பு‘மேக் இன் இந்தியா’திட்டத்தை, மத்திய அரசு பிரபலப்படுத்தி வரும் நிலையில், தொழில் துவங்குவதற்கு உகந்த சூழல் நிலவும் நாடுகளின்பட்டியலில், இந்தியா முன்னேறுவது மிகவும் அவசியமாகும். ஓராண்டாக, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், அதற்கு உறுதுணையாக இருக்கும்.இத்தகைய காரணங்களால், உலகளவில், தொழில் துவங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, 30 இடங்கள் முன்னேறி டாப் – 100 நாடுகளில் ஒன்றாகி இருக்கிறது.இவ்வாறு வல்லுனர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|