பதிவு செய்த நாள்
01 நவ2017
16:35
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சில தினங்களுக்கு முன்னர் தான் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்த நிலையில், இப்போது மீண்டும் ஒரு புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளன. அதோடு இன்றைய வர்த்தகமும் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
உலகளவில், தொழில் துவங்குவதற்கு எளிதான சூழல் உள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா, 30 இடங்கள் முன்னேறி, முதல், 100 இடங்களுக்குள் இடம் பிடித்தது. இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் காலை முதலே அதிக உயர்வுடன் காணப்பட்டன. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிப்டி 100 புள்ளிகளுக்கு அதிகமாகவும் ஏற்றம் கண்ட நிலையில், அந்த ஏற்றம் நாள் முழுக்க நீடித்தன. மேலும் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதம் தொழில்துறை உயர்ந்துள்ளதாலும் இன்றைய வர்த்தகம் அதிக உயர்வுடனும், புதிய சாதனையுடனும் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 387.14 புள்ளிகள் உயர்ந்து 33,600.27-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 105.20 புள்ளிகள் உயர்ந்து 10,440.50-ஆகவும் முடிந்தன.
முன்னதாக சென்செக்ஸ் 33,266.16, நிப்டி 10,384.50 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்த நிலையில், இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி, தகவல் தொழில்நுட்பம், உலோகம் மற்றும் பொதுத்துறை சார்ந்த பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|