பதிவு செய்த நாள்
02 நவ2017
03:34
புதுடில்லி, நவ. 2–நாட்டின், மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி இந்தியா, அக்டோபரில், 9.5 சதவீதம் அளவுக்கு, விற்பனை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.அக்டோபரில், இந்நிறுவனம், மொத்தம், 1 லட்சத்து, 46 ஆயிரத்து, 446 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, 2016 அக்டோபரில், மொத்த வாகனங்களின் விற்பனை, 1 லட்சத்து, 33 ஆயிரத்து, 793 என்ற அளவில் இருந்தது.உள்நாட்டு வாகன விற்பனையை பொறுத்தவரை, 9.9 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து, 36 ஆயிரமாக உள்ளது. இது, 2016 அக்டோபரில், 1 லட்சத்து, 23 ஆயிரத்து, 764 ஆக இருந்தது.‘ஆல்டோ, வேகன் ஆர்’ உள்ளிட்ட, சிறிய ரக கார்களின் விற்பனை, 4.2 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. ‘சுவிப்ட், டிசையர், பலேனோ’ உள்ளிட்ட, ‘காம்பாக்ட்’ ரக கார்களின் விற்பனை, 24.7 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை எட்டி இருக்கிறது.‘எர்டிகா, எஸ் – -கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா’ உள்ளிட்ட, பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை, 29.8 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.ஏற்றுமதியை பொறுத்தவரை, 2016 அக்டோபருடன் ஒப்பிடும் போது, 4.2 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு அக்டோபரில், 10 ஆயிரத்து, 029 பயன்பாட்டு வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. இது, இந்த ஆண்டு, 10 ஆயிரத்து, 446 வாகனங்களாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|