பதிவு செய்த நாள்
02 நவ2017
03:34
புதுடில்லி : உலக வங்கியின், ‘எளிதாக தொழில் துவங்கும் சூழல் கொண்ட நாடுகள்’ பட்டியலில், இந்தியா, 130வது இடத்திலிருந்து, 30 இடங்கள் முன்னேறி, 100வது இடத்தை பிடித்துள்ளது.இந்நிலையில், இந்த தரவரிசையில் மேலும் முன்னேற, ஜி.எஸ்.டி., உதவும் என, வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.இது குறித்து, யெஸ் பேங்கின் நிர்வாக இயக்குனர், ரானா கபூர் கூறுகையில், ‘‘வரும் ஆண்டுகளில், எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில், குறிப்பிடத்தக்க இடத்தை அடைய, ஜி.எஸ்.டி., அறிமுகம்கைகொடுக்கும்,’’ என்றார்.நேற்று முன்தினம் வெளியான, உலக வங்கி பட்டியலில், இந்தியா, 100வது இடத்தை பிடித்திருந்தாலும், ஜூலை, 1ல் அறிமுகம் செய்யப்பட்ட, ஜி.எஸ்.டி., மாற்றத்தை, உலக வங்கி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ‘ஜி.எஸ்.டி., அறிமுகத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாத நிலையிலேயே, இந்தியா, 30 இடங்கள் முன்னேறி இருக்கிறது. எனவே, வரும் ஆண்டுகளில், ஜி.எஸ்.டி., அறிமுகத்தின் காரணமாக, இந்தியா மேலும் பல படிகள் முன்னேறும்’ என்கின்றனர், வல்லுனர்கள்.‘‘உரிமங்கள், வரி அமைப்புகள் ஆகியவற்றை, எளிமைப்படுத்தியதன் காரணமாக, இந்தியா, முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக மாறி வருகிறது,’’ என, ஆக்சிஸ் வங்கி நிர்வாக இயக்குனர், ஷிக்கா சர்மா தெரிவித்து உள்ளார்.இது குறித்து, கே.பி.எம்.ஜி., நிறுவனத்தின் பங்குதாரர், நிலயா வர்மா கூறுகையில், ‘‘ஜி.எஸ்.டி.,யை கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது, இந்தியா மேலும் முன்னேறிவிடும். ‘‘தொழில் துவங்குவது; எல்லைகள் தாண்டி வியாபாரம் செய்வது; நில சீர்திருத்தம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தும் போது, 50வது இடத்தை அடைய முடியும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|