பதிவு செய்த நாள்
02 நவ2017
03:35
புதுடில்லி : அக்டோபரில், இந்திய தயாரிப்புத் துறை, தேவைகள் குறைவு காரணமாகவும், ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்ட தாக்கங்கள் காரணமாகவும், தேக்க நிலையை அடைந்திருப்பதாக, ‘நிக்கி இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.நிக்கி இந்தியாவின், பி.எம்.ஐ., குறியீடு, செப்டம்பரில் இருந்த, 51.2 என்ற அளவில் இருந்து, அக்டோபரில், 50.3 ஆக சரிவை சந்தித்துள்ளது. இது, தயாரிப்புத் துறையில், பரவலான தேக்க நிலையை உணர்த்துவதாக, நிக்கி இந்தியா தெரிவித்துள்ளது.இது குறித்து, ‘நிக்கி இந்தியா’ தெரிவித்துள்ளதாவது:ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்ட தேவை குறைவு, புதிய தொழில்களில் தேக்க நிலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, உற்பத்தி செயல்பாடுகள் சரிந்துள்ளன. மேலும், மே மாதம் முதல், மூலப்பொருட்களின் விலை உயர்வாலும் பாதிப்பை சந்தித்து வருகிறது, தயாரிப்புத் துறை. ஏற்றுமதிக்கான ஆர்டர்களும், 2013 செப்டம்பரில் இருந்து, சரிவை சந்திக்கிறது.இருப்பினும், அடுத்த, 12 மாதங்களில், ஜி.எஸ்.டி., அறிமுகத்தால் ஏற்படும் பலன்கள் கிடைக்க துவங்கும் என, உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர்.இவ்வாறு நிக்கி இந்தியா தெரிவித்துள்ளது.எளிதாக தொழில் துவங்கும் சூழல் கொண்ட நாடுகள் பட்டியலில், இந்தியா, 100வது இடத்துக்கு முன்னேறி இருக்கும் நிலையில், அதற்கு மாறாக, தயாரிப்புத் துறை குறையீடு, தேக்க நிலையை சந்தித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|