பதிவு செய்த நாள்
03 நவ2017
00:00
புதுடில்லி : ‘வலைதளத்தில், ‘விர்ச்சுவல் கரன்சி’ எனப்படும், மெய்நிகர் கரன்சியின் பரிவர்த்தனையில் ஈடுபடும் முகவர்களுக்கு, தடை விதிக்க வேண்டும்’ என, உயர்மட்டக் குழு ஒன்று, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.
இதையடுத்து, இந்தியாவில், மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனை முகவர்களுக்கு தடை விதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்கிறது. வலைதளத்தில், ‘பிட்காய்ன், எரித்திரியா’ உள்ளிட்ட, ஏராளமான மெய்நிகர் கரன்சிகள் புழங்குகின்றன. இக்கரன்சிகள் மீது, வர்த்தகம் நடைபெறுகிறது. ஏராளமானோர், ரொக்கத்திற்கு இந்த மெய்நிகர் கரன்சிகளை வாங்குகின்றனர்.
‘இந்த கரன்சி பரிவர்த்தனைக்கு, சட்ட அங்கீகாரம் எதுவும் கிடையாது. இதில் ஈடுபடுவோர் இழப்பை சந்திப்பர்’ என, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. எனினும், நாளுக்கு நாள் மெய்நிகர் கரன்சிகளின் மதிப்பு அதிகரித்து வருகிறது. ஆக., 2ல், ஒரு, ‘பிட்காய்ன்’ மதிப்பு, 1.79 லட்சம் ரூபாயாக இருந்தது. மூன்றே மாதங்களில், இந்த மதிப்பு தற்போது, 4.90 லட்சம் ரூபாயாக எகிறி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|