பதிவு செய்த நாள்
03 நவ2017
00:04
மும்பை : வால்மார்ட் நிறுவனம், குறிப்பிட்ட பகுதியில், அனைத்து பொருட்களையும், ‘ஆன் – லைன்’ வாடிக்கையாளர்கள் பெறும் வகையில், ‘டார்க் ஸ்டோர்’ என்ற விற்பனை கிடங்கை, மும்பை, பிவாண்டியில் திறந்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைமை செயல் அதிகாரி, கிரிஷ் ஐயர் கூறியதாவது: கடை இல்லாமல், ‘ஆன் – லைன்’ மூலம் சில்லரை விற்பனை செய்ய, ஓராண்டுக்கு முன் திட்டமிட்டோம். அதை, சோதனை முறையில், லக்னோவில் அறிமுகப்படுத்தினோம். ‘ஆர்டர்’ செய்த, 24 மணி நேரத்திற்குள் பொருட்களை, ‘சப்ளை’ செய்வது சவாலாக இருந்தாலும், அதை, சரியாக நிர்வகித்தோம்.
இதையடுத்து, முதன்முறையாக, பிவாண்டியில், 45 ஆயிரம் சதுர அடியில், ‘டார்க் ஸ்டோர்’ என்ற பிரமாண்ட கிடங்கை திறந்துள்ளோம். வலைதள ஆர்டரின்படி, இங்கிருந்து, அனைத்து பொருட்களும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யப்படும். சில ஆண்டுகளாக, நிறுவனத்தின் கடை விரிவுபடுத்தும் பணி, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது; இது தற்போது, தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|