பதிவு செய்த நாள்
10 நவ2017
16:14
மும்பை : பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு மதிப்புக்கள் குறைந்ததை அடுத்து, இந்திய பங்குச்சந்தைகள் காலையில் சரிவுடன் துவுங்கின. இருப்பினும் பிற்பகல் வர்த்தகத்தின் போது, எஸ்பிஐ தனது 2 ம் காலாண்டு நிகரலாபத்தை இன்று வெளியிட்டது.
இரண்டாவது காலாண்டு நிகரலாபம் இரண்டு மடங்ககை விட அதிகம் என எஸ்பிஐ அறிவித்ததாலும், இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் 177 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி.,யை குறைக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்ததாலும் பங்குச்சந்தைகள் ஏறுமுகத்திற்கு திரும்பின. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, சென்செக்ஸ் 63.63 புள்ளிகள் உயர்ந்து 33,314.56 புள்ளிகளாகவும், நிப்டி 12.80 புள்ளிகள் உயர்ந்து 10,321.80 புள்ளிகளாகவும் உள்ளன. மும்பை பங்குச்சந்தையில் 1480 பங்குகள் சரிவுடனும், 1197 பங்குகள் உயர்வுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|