பதிவு செய்த நாள்
10 நவ2017
23:53
புதுடில்லி : ரிலையன்சின், ‘ஆர்ஜியோ’ நிறுவனம், அதன் துணை நிறுவனம் மூலம், ‘ஜியோ பிரைம்’ மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, 2,599 ரூபாய் மதிப்பிற்கு, ‘கேஷ் பேக்’ மற்றும், ‘வவுச்சர்’ சலுகைகளை வழங்க உள்ளது. இத்திட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இச்சலுகைகளை பெற, வாடிக்கையாளர்கள், 25க்குள், 399 ரூபாய்க்கு, ‘ரீசார்ஜ்’ செய்ய வேண்டும். அவர்களுக்கு, நவ., 20 முதல், மின்னணு வணிக நிறுவனங்களில், பல்வேறு பொருட்களை சலுகை விலையில் வாங்குவதற்கான, ‘வவுச்சர்’கள் வழங்கப்படும். இவற்றை, சுற்றுலா வலைதளங்கள், சில்லரை விற்பனை கடைகளிலும் பயன்படுத்தலாம். இந்த வகையில், 2,599 ரூபாய் மதிப்பிலான பயன்களை, ஆர்ஜியோ வாடிக்கையாளர்கள் பெறலாம் என, துணை நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
ஏர்டெல் நிறுவனம், சமீபத்தில், ‘போஸ்ட் பெய்டு’ வாடிக்கையாளர்களுக்கு, 499 ரூபாய் மாத கட்டணத்தில், இலவச அழைப்பு மற்றும் தகவல் பரிவர்த்தனை, மொபைல் போன் காப்பீடு உள்ளிட்ட வசதிகளை அறிமுகப்படுத்தியது. வோடபோன் நிறுவனமும், இதே கட்டணத்தில், இத்தகைய வசதிகளை அளிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|