பதிவு செய்த நாள்
10 நவ2017
23:54
மும்பை : ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள அறிக்கை: வயதானோர், வங்கிச் சேவைகளை பெற சிரமப்படுகின்றனர். பல சமயங்களில், மூத்த குடிமக்களை வங்கிக் கிளைகள் புறக்கணிக்கின்றன.
‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனையை அதிகரிக்கவும், ஏ.டி.எம்., பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியமாகும். இதை கருதி, அனைத்து வங்கிகளும், 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடு தேடிச் சென்று வங்கி சேவை வழங்க வேண்டும்.
அவர்களுக்கு, பணம் டிபாசிட் செய்வது, பணம் எடுப்பது, காசோலை புத்தகங்கள் வழங்குவது, வரைவோலை சேவைகளை அளிப்பது, ‘வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்’ செயல்பாட்டிற்கான ஆவணங்களை பெறுதல் போன்ற சேவைகளை வீட்டிலேயே பெற, வங்கிகள் வசதி செய்ய வேண்டும். மேலும், ஓய்வூதியம் உள்ளிட்ட தேவைகளுக்கு அவசியமான, வாழ்நாள் சான்றுகளை, அவர்களின் வீட்டிலேயே சென்று பெற வேண்டும். அத்துடன், மூத்த குடிமக்களுக்கு என, வங்கிக் கிளைகளில் தனி பிரிவை ஏற்படுத்தி, சேவை வழங்க வேண்டும். இந்த நடைமுறைகளை, டிச., 31 முதல் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|