பதிவு செய்த நாள்
10 நவ2017
23:56
மும்பை : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், ஒட்டுமொத்த நிகர லாபம், நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டின், ஜூலை – செப்., வரையிலான, இரண்டாவது காலாண்டில், பல மடங்கு உயர்ந்து, 1,840.43 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 20.70 கோடி ரூபாய் என்ற அளவிற்கே இருந்தது. இவ்வங்கி, எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், செப்டம்பரில் மேற்கொண்ட புதிய பங்கு வெளியீட்டில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து, 8,400 கோடி ரூபாய் திரட்டிக் கொண்டது. அதனால், வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் உயர்ந்து உள்ளது. அதே சமயம், வங்கியின் நிகர வாராக்கடனும், 5.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 4.19 சதவீதமாக இருந்தது.
வாராக்கடன் அதிகரித்ததால், அதற்கான ஒதுக்கீடு, இதே காலத்தில், 7,669.66 கோடி ரூபாயில் இருந்து, 16,715.20 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம், 37.9 சதவீதம் குறைந்து, 2,538.32 கோடி ரூபாயில் இருந்து, 1,581.55 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|