ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் ரூ.1,840 கோடிஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் ரூ.1,840 கோடி ... தங்கம் விலையில் மாற்றமில்லை தங்கம் விலையில் மாற்றமில்லை ...
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீடு வாங்க ரூ.25 லட்சம் முன்பணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
23:57

புதுடில்லி : ‘மத்­திய அரசு ஊழி­யர்கள், வீடு, பிளாட் வாங்க, முன்­ப­ண­மாக, 25 லட்­சம் ரூபாய் வழங்­கப்­படும்’ என, மத்­திய வீட்­டு­வ­சதி மற்­றும் நகர்ப்­புற விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம் தெரி­வித்துள்­ளது.

இது குறித்து, அமைச்­சக உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: மத்­திய அரசு ஊழி­யர்­கள் வீடு கட்­டு­வ­தற்கு, எச்.பி.ஏ., என்ற திட்­டத்­தில், முன்­ப­ணம் வழங்­கப்­ப­டு­கிறது. தற்­போது, இத்­திட்­டத்­தின் விதி­மு­றை­களில் திருத்­தம் செய்­யப்­பட்டு உள்­ளது. இதன்­படி, வீடு, பிளாட் ஆகி­ய­வற்றை வாங்­கவோ அல்­லது வீடு கட்­டவோ வழங்­கப்­படும் முன்­ப­ணம், 7.50 லட்­சம் ரூபா­யில் இருந்து, 25 லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது.

இத்­தொ­கையை, 20 ஆண்­டு­களில், சுலப தவ­ணை­யில் திரும்­பச் செலுத்­த­லாம். முன்­ப­ணத்­திற்கு, 6 – 9.5 சத­வீ­தம் வரை, நான்கு வித­மாக வசூ­லிக்­கப்­பட்ட வட்டி, தற்­போது, 8.5 சத­வீ­தம் என, தனி வட்டி விகி­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

மிச்சம்:
மத்­திய அரசு ஊழி­யர்­கள், தங்­களின் அடிப்­படை ஊதி­யத்தை பொறுத்து, 25 லட்­சம் ரூபாய் வரை, முன்­ப­ணம் பெற­லாம். வங்­கி­யில் பெறும் வீட்­டு­வ­சதி கடனை விட, இத்­திட்­டத்­தில், மத்­திய அரசு ஊழி­யர்­கள், குறிப்­பி­டத்­தக்க தொகையை மிச்­சப்­ப­டுத்­த­லாம். உதா­ர­ண­மாக, எஸ்.பி.ஐ., போன்ற வங்­கி­களில், 8.35 சத­வீத கூட்டு வட்­டி­யில், 25 லட்­சம் ரூபாய் வீட்­டு­வ­சதி கடன் வாங்கி, 20 ஆண்­டு­களில் திரும்­பச் செலுத்­தும் ஒரு­வர், மாத தவ­ணை­யாக, 21,459 ரூபாய் செலுத்த நேரி­டும்.

அவர், 20 ஆண்­டு­களின் முடி­வில், 26.50 லட்­சம் ரூபாய் வட்­டி­யு­டன், மொத்­தம், 51.50 லட்­சம் ரூபாய் செலுத்தி இருப்­பார். இதே தொகையை, எச்.பி.ஏ., திட்­டத்­தில் முன்­ப­ண­மாக பெற்று, 8.5 சத­வீத தனி வட்டி அடிப்­ப­டை­யில், 20 ஆண்­டு­களில் திரும்ப செலுத்­தும் போது, முதல், 15 ஆண்­டு­க­ளுக்கு மாத தவ­ணை­யாக, 13,890 ரூபாய் செலுத்த நேரி­டும். எஞ்­சிய காலத்­திற்­கான மாத தவணை, 26,411 ரூபா­யாக இருக்­கும். இதன்­படி, 20 ஆண்­டு­களில் ஒரு­வர், 15.84 லட்­சம் ரூபாய் வட்டி தொகை உட்­பட, மொத்­தம், 40.84 லட்­சம் ரூபாய் மட்­டுமே செலுத்­து­வார். இந்த வகை­யில், அவர், 10.66 லட்­சம் ரூபாய் சேமிக்­க­லாம்.

விரி­வாக்­கம்:
மத்­திய அரசு ஊழி­யர்­க­ளுக்கு, வீட்டை விரி­வு­ப­டுத்­தும் திட்­டத்­திற்­கான முன்­ப­ணம், 1.80 லட்­சம் ரூபா­யில் இருந்து, 10 லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது. மேலும், ஒரு­வர் வாங்­கும் வீட்­டிற்­கான வரம்­புத் தொகை­யும், 30 லட்­சம் ரூபா­யில் இருந்து, 1 கோடி ரூபா­யாக அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது. வங்­கி­கள் அல்­லது நிதி நிறு­வ­னங்­களில் பெற்ற வீட்­டுவ­சதி கடனை, எச்.பி.ஏ., திட்­டத்­திற்கு மாற்­றும் வச­தி­யும் உள்­ளது.மத்­திய அர­சின் இந்த திட்­டம், வீட்­டு­வ­சதி துறை­யின் வளர்ச்­சிக்கு துணை புரி­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

இணைந்தும் பெறலாம்:
மத்­திய அர­சில் பணி­பு­ரி­யும் தம்­ப­தி­யில், ஒரு­வர் மட்­டுமே, வீடு வாங்க முன்­ப­ணம் பெற­லாம் என்­பதை மாற்றி, தற்­போது, இரு­வ­ரும் இணைந்தோ அல்­லது தனி­யா­கவோ முன்­ப­ணம் பெற வசதி செய்­யப்­பட்டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)