பதிவு செய்த நாள்
11 நவ2017
11:37
கவுகாத்தி : ஜூலை 1 ம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. அப்போது 250 பொருட்கள் 28 சதவீதம் வரி விதிப்பின் கீழ் வைக்கப்பட்டிந்தது.
ஆனால் அடுத்தடுத்து நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பல பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டதுடன், சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் 177 பொருட்களின் ஜிஎஸ்டி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 132 நாட்களில் இதுவரை 250 க்கும் அதிகமான பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
ஷாம்பூ, சோப்பு, சாக்லேட்கள், பேன்கள், மர நாற்காலிகள், சுகாதார பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் மீதான ஜிஎஸ்டி 10 சதவீதம் வரை, அதாவது 28 சதவீதத்தில் இருந்த 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது புகையிலை பொருட்கள், ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட 180 சொகுசு உபயோக பொருட்கள் மட்டுமே 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழ் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|