பதிவு செய்த நாள்
12 நவ2017
03:19
புதுடில்லி, நவ. 12–மத்திய அரசு, ‘சாவரின் கோல்டு பாண்டு’ எனப்படும், தங்க சேமிப்பு பத்திரங்களை, நாளை வெளியிடுகிறது. இவற்றுக்கு, ஒரு கிராம், 2,961 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தங்க சேமிப்பு பத்திரங்களில், அடுத்தகட்ட வெளியீட்டு காலம், நாளை துவங்கி, 15ல் முடிவடைகிறது. ஒரு கிராம், 2,961 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதலீடு செய்வோருக்கு, நவ., 20ல், தங்க சேமிப்பு பத்திரங்கள் வழங்கப்படும்’ என, கூறப்பட்டுள்ளது.வலைதளம் வாயிலாக, தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வோருக்கு, கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், இரண்டாம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு, அக்., 9ல் துவங்கி, 11ல் முடிவடைந்தது. இதையடுத்து, வாரந்தோறும் திங்கள் முதல், புதன் வரை, தங்க சேமிப்பு பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இரண்டாம் கட்ட இறுதி வெளியிடு, டிச., 27ல் முடிவடைகிறது. குறிப்பிட்ட வங்கிகள், அஞ்சலகங்கள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் நிறுவனம், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.இதில், குறைந்தபட்சம், 1 கிராம் முதல், 500 கிராம் வரை ஒருவர் முதலீடு செய்யலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|