பதிவு செய்த நாள்
12 நவ2017
03:21
புதுடில்லி : சிமென்ட்டுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்படாததால், சிமென்ட் நிறுவனங்கள் எமாற்றம் அடைந்துள்ளன.இது குறித்து, இந்நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர், சைலேந்திர சோக்சி கூறியதாவது:பிரதமரின், ‘துாய்மை இந்தியா’ உள்ளிட்ட, பல்வேறு அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு, சிமென்ட் அவசியமாக உள்ளது. ஆனால், அதற்கான, ஜி.எஸ்.டி.,யை குறைக்காமல், ‘வாஷிங் மிஷின், ஏசி’ போன்ற ஆடம்பர பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டு உள்ளது.கட்டுமான பொருட்களை ஆடம்பர பிரிவில் சேர்த்து, வரியை குறைக்காதது எதிர்பார்க்காத ஏமாற்றத்தை அளித்துள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும், சிமென்ட் துறைக்கு, 28 சதவீத வரி உள்ளது. இதை, குறைந்தபட்சம், 18 சதவீதமாக குறைத்திருக்கலாம். ஏற்கனவே, சிமென்ட் துறை மந்த நிலையில் உள்ளது.நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு, மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததால், இரண்டாவது அரையாண்டில், சிமென்ட் துறை எழுச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரி குறைப்பு செய்திருந்தால், இது உறுதியாகி இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|