பதிவு செய்த நாள்
12 நவ2017
23:43
‘அடல் பென்ஷன் யோஜானா’ திட்டத்தை, மேலும் பரவலாக்கும் வகையில், மாநில அளவிலான, விழிப்புணர்வு பிரசார திட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை, பயனாளிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில், பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம், முதலில், மக்கள் எனும் பெயரில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளும் என, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முதல் பிரசார விழிப்புணர்வு, நாட்டின் பெரிய மாநிலமான, உ.பி.,யில், 7ம் தேதி துவங்கி உள்ளது. 14 வரை, இது மேற்கொள்ளப்படும். முதல் மூன்று நாட்களில், 15 ஆயிரம் புதிய கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, பீஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், இது போன்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. அடுத்த சில வாரங்களில், இவை திட்டமிடப்பட்டு உள்ளன. தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும். 2015ல் துவக்கப்பட்ட, அடல் பென்ஷன் திட்டத்தில், 70 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இத்திட்டத்தை, மேலும் பரவலாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|