தங்கம் விலையில் மாற்றமில்லைதங்கம் விலையில் மாற்றமில்லை ... ஓட்டல்களில் இன்று முதல் 5 சதவீத ஜி.எஸ்.டி., வசூல் அமல் ஓட்டல்களில் இன்று முதல் 5 சதவீத ஜி.எஸ்.டி., வசூல் அமல் ...
ரூ.30 லட்சத்துக்கு மேல் வாங்கும் சொத்துக்கள் கண்காணிக்கப்படும்: மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2017
15:59

புதுடில்லி: டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நேரடி வரி ஆணைய தலைவர் சுஷில் சந்த்ரா, கணக்கில் வராத பணத்தை பரிவர்த்தனை செய்வதற்காக போலியாக தொடங்கப்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் இந்த நிறுவனங்கள் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் செய்த பண பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றார்.

மேலும், அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. நிறுவனங்களின் 621 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. பினாமி பரிவர்த்தனை சட்டத்தின்படி ரூ.1800 கோடி சொத்து குறித்து விசாரிக்கிறோம். கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற உதவும் வழிமுறைகளை கண்டுபிடித்து அழித்து வருகிறோம். இதன் மூலம் போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வருமான வரி தாக்கல் செய்பவர்களின் விவரங்களில் ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது குறித்து சோதனை செய்ய உள்ளோம். அவர்களின் வரி தாக்கலில் சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனை மற்றும் விவரங்கள் பொருந்தவில்லை என்றால் பினாமி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பினாமி சொத்து வழக்குகளில் மிக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.

வரி நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் பினாமி தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் 27 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பிலிருந்தும் விவரங்கள் கிடைத்து வருகின்றன. சமீபத்தில் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பரிவர்த்தனைகளை வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிறுவனங்கள், பினாமி சொத்துக்களை கையாண்டது அல்லது பிற நிதி பரிவர்த்தனைகளை செய்தது வரித்துறை விவரங்களுடன் பொருந்தவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பது உறுதி என தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)