பதிவு செய்த நாள்
17 நவ2017
00:12
புதுடில்லி : ‘இந்தியாவில், அமைப்பு சார்ந்த துறைகளில் மேற்கொள்ளப்படும் சில்லரை விற்பனை, 2020ல், 1 லட்சம் கோடி டாலரை எட்டும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ‘அசோசெம் – எம்.ஆர்.ஆர்.எஸ்., இந்தியா டாட் காம்’ வெளியிட்டுள்ள அறிக்கை: மாறி வரும் மக்களின் வாழ்க்கை பாணியும், உயர்ந்து வரும் நடுத்தர மக்களின் வருவாயும், சில ஆண்டுகளாக, நுகர்பொருட்கள் துறையின் வேகமான வளர்ச்சிக்கு துணை புரிந்து வருகிறது. இதன் வளர்ச்சி, ஒட்டுமொத்த சில்லரை விற்பனை துறையின் மேம்பாட்டுக்கு வித்திடும். இதன் காரணமாக, தற்போது, 67,200 கோடி டாலர் மதிப்பிலான, சில்லரை விற்பனை சந்தை, ஆண்டுக்கு, 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2020ல், 1.10 லட்சம் கோடி டாலராக உயரும். இத்துடன், நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாயும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும்.
மக்களின், அவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நுகர்பொருட்கள் சந்தையின் மதிப்பு, 2016ல், 4,900 கோடி டாலராக இருந்தது. இது, ஆண்டுக்கு, சராசரியாக, 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, அடுத்த மூன்று ஆண்டுகளில், 10,370 கோடி டாலரை எட்டும். கிராமப் புறங்களில், 2,940 கோடி டாலர் மதிப்புடன் திகழும் நுகர்பொருட்கள் சந்தை, ஆண்டுக்கு சராசரியாக, 14.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2025ல், 22 ஆயிரம் கோடி டாலராக உயரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சவால்:
கிராமங்களில், ‘ஸ்மார்ட் போன்’ மூலம், வலைதளத்தில், நுகர்பொருட்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. இத்தகையோருக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்வது, மின்னணு வணிக நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்.
-‘அசோசெம் – எம்.ஆர்.ஆர்.எஸ்., இந்தியா டாட் காம்’ கூட்டறிக்கை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|