பதிவு செய்த நாள்
17 நவ2017
10:04
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (நவ.,17) புதிய உச்சத்துடன் துவங்கி உள்ளன. மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இந்திய அரசின் நாணய மதிப்பீடுகளை பா 2 (Baa 2) விலிருந்து பா 3 (Baa 3) க்கு மேம்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 396.36 புள்ளிகள் உயர்ந்து 33,503.18 புள்ளிகளாகவும், நிப்டி 117.10 புள்ளிகள் உயர்ந்து 10,331.90 புள்ளிகளாகவும் உள்ளன.
ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், இன்போசிஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா, விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|