பதிவு செய்த நாள்
18 நவ2017
00:00
மும்பை : ரிலையன்ஸ் குழும தலைவர், முகேஷ் அம்பானி, அடுத்து, வலைதளத்தில் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கு போட்டியாக உருவெடுக்க உள்ளதாக, ‘மார்கன் ஸ்டான்லி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘ஆர்ஜியோ’ மூலம், தொலை தொடர்பு துறையை அதிரடியாக கலக்கிய முகேஷ் அம்பானி, அடுத்து, ‘அமேசான், பிளிப்கார்ட்’ போன்ற வலைதள சந்தை நிறுவனங்களுக்கு போட்டியாக உருவெடுக்க உள்ளார். இதற்காக அவர், தனி நிறுவனத்தை உருவாக்காமல், ‘ஆர்ஜியோ’வை பயன்படுத்துவார். குறுகிய காலத்தில், 14 கோடி சந்தாதாரர்களை சேர்த்துள்ள ஆர்ஜியோ, தற்போது, ‘ரீசார்ஜ்’ செய்யும் போது, பல்வேறு பொருட்களை வாங்க, தள்ளுபடி கூப்பன்களை வழங்க துவங்கி உள்ளது. இதன் மூலம், ரிலையன்ஸ் குழுமத்தின், ‘பிரெஷ், டிஜிட்டல், டிரென்ட்ஸ்’ உட்பட, பல்வேறு கடைகளில், சலுகை விலையில் பொருட்கள் வாங்கலாம்.
இலவச அழைப்புகள் மற்றும் இணைய வசதியுடன் கிடைக்கும், ‘ஆர்ஜியோ’ போன்கள், ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் விற்பனைக்கும் துணை புரியும். இந்த வகையில், ‘வரும் ஆண்டுகளில், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக, ரிலையன்ஸ் குழுமம் விளங்கும்’ என, மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|