பதிவு செய்த நாள்
18 நவ2017
00:01
புதுடில்லி : ஜப்பானைச் சேர்ந்த, சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன், டொயொட்டா மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து, 2020ல், இந்தியாவில், மின் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காக, ஒப்பந்தம் செய்துள்ளது.
தொழில் நுட்பம்:
இது குறித்து, இரு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: ஒப்பந்தத்தின்படி சுசூகி நிறுவனம், இந்திய சந்தைக்கான மின் வாகனங்களை தயாரிக்கும். மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களை, டொயொட்டோ நிறுவனத்துக்கும் வழங்கும். டொயொட்டோ நிறுவனத்தை பொறுத்தவரை, தொழில்நுட்ப விஷயங்களில், தன் ஆதரவை, சுசூகி நிறுவனத்திற்கு வழங்கும். வாகன தயாரிப்புடன் நின்று விடாமல், இதர சேவைகளையும் வழங்க, தேவையான முயற்சி களும் எடுக்கப்பட உள்ளன.
ஆய்வு:
குறிப்பாக, மின் வாகனங்களுக்கான, சார்ஜிங் மையங்கள், விற்பனைக்கு பிறகான, பழுது நீக்கும் சேவைக்கான தகுந்த பயிற்சிகள், காலாவதி ஆகும் பேட்டரிகளை கையாள்வது ஆகியவை குறித்து, விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில், மின் வாகனங்களை, இந்தியாவில் தயாரிப்பது குறித்தும் ஆராயப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|