சென்னை – பெங்களூரு 20 நிமிட பயணம்; அமெரிக்க நிறுவனத்தின், ‘ஹைப்­பர்­லுாப்’ திட்டம்சென்னை – பெங்களூரு 20 நிமிட பயணம்; அமெரிக்க நிறுவனத்தின், ‘ஹைப்­பர்­லுாப்’ ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு ...
இந்தியாவின் கடன் தகுதி மதிப்பு உயர்வு; மோடிக்கு, ‘மூடிஸ்’ கொடுத்த பூஸ்ட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2017
00:04

புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ இந்தியாவின் கடன் தகுதி மதிப்பை, 13 ஆண்டுகளுக்கு பின் உயர்த்தி உள்ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­தி­யா­வில் தொட­ரும், பொரு­ளா­தா­ரம் மற்­றும் நிறு­வ­னங்­கள் சார்ந்த சீர்­தி­ருத்­தங்­க­ளால், அந்­நாடு உய­ரிய வளர்ச்­சியை காணும். அர­சின் கடன்­களை சமா­ளிக்­கும் வகை­யில், மிகப்­பெ­ரிய அள­வில், நிலை­யான நிதி வளம் உள்­ள­தால், நடுத்­தர கால அள­வில், அர­சின் பொதுக்­க­டன், படிப்­ப­டி­யாக குறை­யும். அதே சம­யம், இந்­தி­யா­வின் கட­னில், பெருங்­க­டன்­களின் சுமை­யும் கவ­லைக்­கு­ரி­ய­தாக உள்­ளது. பொரு­ளா­தார மந்த நிலை­யால், கடன் சுமை அதி­க­ரித்­தால் கூட, நாட்­டில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் சீர்­தி­ருத்­தங்­க­ளால், அந்த இடர்ப்­பாட்டை சமா­ளிக்­க­லாம்.அத­னால், மத்­திய அர­சின் உள்­நாட்டு கரன்சி மற்­றும் அன்­னிய செலா­வ­ணி­யி­லான கடன் பத்­திர வெளி­யீ­டு­க­ளுக்­கான, தர நிர்­ணய அள­வீடு, ‘பி.ஏ.ஏ., – 3’ என்ற நிலை­யில் இருந்து, ஒரு படி உயர்த்தி, ‘பி.ஏ.ஏ., – 2’ ஆக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

நாட்­டின் கடன் தகுதி மதிப்­பீடு, சாத­க­மான நிலை­யில் இருந்து, ஸ்தி­ர­மான நிலைக்கு உயர்த்­தப்­பட்டு உள்­ளது. இந்­தி­யா­வில், பல முக்­கிய சீர்­தி­ருத்­தங்­கள், இன்­னும் திட்ட வடி­வி­லேயே உள்ளன. எனி­னும், நடை­மு­றைக்கு வந்த சீர்­தி­ருத்­தங்­க­ளால், வர்த்­த­கச் சூழல் மேம்­பட்டு உள்­ளது; உற்­பத்­தித் திறன் உயர வழி­வ­குத்து உள்­ளது. உள்­நாடு மற்­றும் அன்­னிய முத­லீ­டு­கள் அதி­க­ரிக்க துணை புரிந்­து உள்­ளது. இந்­தி­யா­வின் வலு­வான வளர்ச்­சி­யும், சீர்­தி­ருத்­தங்­களும், எத்­த­கைய இடர்ப்­பா­டு­களை எதிர்­கொள்­ள­வும், உல­க­ள­வில் அதி­க­ரித்து வரும் போட்­டியை சமா­ளிக்­கக் கூடிய ஆற்­ற­லை­யும் அளிக்­கும்.

ஜி.எஸ்.டி., மாநி­லங்­கள் இடை­யி­லான வர்த்­தக தடை­களை அகற்றி, உற்­பத்தி உயர வழி­வ­குத்து உள்­ளது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை, ‘ஆதார்’ இணைப்பு, பய­னா­ளி­க­ளுக்கு நேரடி மானி­யம் உள்­ளிட்ட பல சீர்­தி­ருத்­தங்­கள், கறுப்பு பொரு­ளா­தா­ரத்­தின் பங்கை குறைக்க வழி செய்­துள்ளன. வங்கி வாராக்­க­டன் பிரச்­னைக்கு, மறு பங்கு முத­லீட்டு திட்­டம் தீர்­வ­ளிக்­கும். எனி­னும், நிலம் மற்­றும் தொழி­லா­ளர் சந்தை சார்ந்த சீர்­தி­ருத்­தங்­கள், மாநில அர­சு­க­ளு­டன் தொடர்­பு­டை­யது என்­ப­தால், பய­ன­ளிக்க சில காலம் ஆகும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

பயன்கள்:
* மத்­திய அரசு மற்­றும் கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், வெளி­நா­டு­களில் திரட்­டும் கடன்­க­ளுக்­கான செல­வி­னம் குறை­யும்* இந்­திய பங்­குச் சந்­தை­கள் ஏற்­றம் காணும்.

காலம் கடந்த அங்கீகாரம்:
நாட்­டின் கடன் தகுதி மதிப்­பீடு, 13 ஆண்­டு­க­ளுக்கு பின் உயர்த்­தப்­பட்­டதை வர­வேற்­கி­றோம். எனி­னும் இது, சில ஆண்­டு­க­ளாக, மத்­திய அரசு, பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்த மேற்­கொண்ட முயற்­சி­க­ளுக்கு, காலம் கடந்து கிடைத்த சர்­வ­தேச அங்­கீ­கா­ரம் ஆகும். இந்­திய பொரு­ளா­தார வளர்ச்சி குறித்து ஐயம் தெரி­வித்­தோர், தங்­களை சுய பரி­சோ­தனை செய்து கொள்­வர் என, நம்­பு­கி­றேன்.
-அருண் ஜெட்லி, மத்திய நிதி அமைச்சர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)