பதிவு செய்த நாள்
20 நவ2017
03:52
மத்திய அரசு, 178 பொருட்களின், ஜி.எஸ்.டி., வரி விகிதத்தை, நவ., 15ம் தேதி முதல், 18 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைத்தபோது, பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. வரிக் குறைப்பின் பலன் பொதுமக்களுக்கு கைமாற்றப்படும்; அதன்மூலமாக, பல்வேறு முக்கியமான பொருட்களின் விலைகள் சடசடவென குறையும்; அது பொருளாதாரம் மேம்படவும் வேலைவாய்ப்புகள் பெருகவும் வழிசெய்யும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், யதார்த்தம் முற்றிலும் வேறு.
மத்திய அரசு, 178 பொருட்களின், ஜி.எஸ்.டி., வரி விகிதத்தை, நவ., 15ம் தேதி முதல், 18 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைத்தபோது, பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. வரிக் குறைப்பின் பலன் பொதுமக்களுக்கு கைமாற்றப்படும்; அதன்மூலமாக, பல்வேறு முக்கியமான பொருட்களின் விலைகள் சடசடவென குறையும்; அது பொருளாதாரம் மேம்படவும் வேலைவாய்ப்புகள் பெருகவும் வழிசெய்யும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், யதார்த்தம் முற்றிலும் வேறு.ஒருசில பன்னாட்டு நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டும் உடனே, வரிக் குறைப்பின் பலனை பொதுமக்களுக்கு வழங்க முன்வந்தன.குறையவில்லைஅந்தப் பொருட்களில், ஜி.எஸ்.டி., என்று தனியே வரி வசூலிக்கப்படுவதில்லை. அது விற்பனை விலையில் சேர்க்கப்படுவதால், மொத்த அல்லது சில்லரை விற்பனையாளர்களிடம் விலை திருத்தத்தை வழங்கி, நடைமுறைப்படுத்தத் துவங்கிவிட்டன.ஆனால், உண்மையான சோதனை, உணவகங்களில் தான் ஏற்பட்டது. 18 மற்றும் 12 சதவீதங்களில் இருந்த வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, எந்தவிதமான உணவகமாக இருந்தாலும், 5 சதவீத வரி வசூலித்தால் போதும் என்றது மத்திய அரசு. உணவகங்களும், நவ., 15 முதல், வரியைச் செவ்வனே குறைத்துவிட்டன.அப்படியானால், உணவுப் பொருட்களின் விலைகள் குறையும் என்றுதானே நினைப்பீர்கள்? இங்கே தான் ஆன்டி- கிளைமாக்ஸ்; விலை குறையவில்லை. பழைய விலைக்கு அருகிலேயே விலைகள் உள்ளன. ஒருசில இடங்களில் கூடவும் செய்துவிட்டன. உணவுப் பொருட்களின் அடிப்படை விலையை உயர்த்திவிட்டன உணவகங்கள்.வரிசையாக காரணங்கள்ஜி.எஸ்.டி., கவுன்சில், உணவகங்களுக்கான வரியை, 5 சதவீதமாக குறைத்தபோது, அவர்கள் உள்ளீட்டு வரியைக் கோரமுடியாது என்று சொல்லிவிட்டது. உள்ளீட்டு வரியின் மூலம் பெற்ற பலனை, உணவகங்கள், பொதுமக்களுக்கு கைமாற்ற மறுத்தன என்பதே இதற்கு காரணம்.விலை குறையாததற்கு, இப்போது, உள்ளீட்டு வரியையே உணவகங்கள் காரணமாகச் சொல்கின்றன.பெரிய நிறுவனங்களாக இருந்தால், 10 – 12 சதவீதம் வரையும், சிறிய உணவகங்களாக இருந்தால், 2 – 3 சதவீதம் வரையும் உள்ளீட்டு வரியினால், அவர்களுக்கு லாபம் கிடைத்து வந்தன.உள்ளீட்டு வரிஉள்ளீட்டு வரி நிறுத்தப்பட்டதால், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றன உணவகங்கள். மெக்டொனால்ட் போன்ற பெரிய நிறுவனங்களே இத்தகு விளக்கங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துவிட்டன.ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த, ஜூலை 2017 முதல், தங்கள் விற்பனையில் சுமார் 30 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளீட்டு வரியைக் கோர முடியாது என்பது இன்னொரு சவுக்கடி எனக் கருதுகின்றன உணவகங்கள்.அவர்கள் பயன்படுத்தும் இடுபொருட்கள், சேவைகள் அனைத்திலும் ஏற்கனவே, ஜி.எஸ்.டி., இருக்கிறது. அதனால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை எங்கே போய் ஈடுகட்டுவது? அதைப் பொதுமக்கள் தலையில் சுமத்துவது ஒன்றே வழி. பணியாளர் சம்பளம், இடத்தின் வாடகை ஆகியவை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், அவற்றைச் சமாளிக்கவும் விலையேற்றம் தான் ஒரே வழி.உணவகங்கள் தரப்பில் சொல்லப்படும் இத்தகைய காரணங்கள், நியாயம் போல் தோன்றினாலும், வாடிக்கையாளர்கள் என்ற பாவப்பட்ட ஜீவன்கள், எங்கே தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்வது? வெளியே சாப்பிட்டே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும், ‘நகர அகதிகள்’ பெருகிவரும் நாடு இது. அவர்களுடைய மாதாந்திர பட்ஜெட்டில் விழும் பெரிய துண்டை யார் ஈடுகட்டுவர்?கொள்ளை லாபத்துக்கு எதிராக, இந்த நிலையில் தான், கொள்ளை லாபம் அடிப்போரைத் தட்டிக்கேட்க ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது, மத்திய அரசு. ‘நேஷனல் ஆன்டி பிராபிடீரிங் அதாரிட்டி’ என்ற இந்த ஆணையம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இயங்கும். இதில் தெரிவிக்கப்படும் புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கொள்ளை லாபம் அடிக்கும் நிறுவனங்களின், ஜி.எஸ்.டி., பதிவையே ரத்து செய்துவிடவும் முடியும்.இந்த நடைமுறை பல அடுக்குகளைக் கொண்டதாக இருப்பதால், ஏராளமான கேள்வி. முதலில் எது லாபம், எது கொள்ளை லாபம்? இது துறைக்குத் துறை மாறுபடாதா?மருந்து நிறுவனங்களில் கிடைக்கும் லாபம் அபரிமிதமானது என்று ஊருக்கே தெரியும். அதற்கான முயற்சி, மூலதனம், ஆய்வுகள், சோதனைகள், காப்புரிமைக் கட்டணம் என்று ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு செய்யப்படும் முதலீடு ஏராளம். அதன் இறுதியில்தான் ஒரு மாத்திரையோ, டானிக்கோ சந்தைக்கு வரும். அங்கே கொடுக்கப்படும் விலை என்பது அந்த ஒரு மாத்திரைக்கு மட்டும் கொடுக்கப்படுவது அன்று, அதன் பின்னுள்ள அத்தனை முயற்சிகளுக்கும், மூளை உழைப்புக்கும், காத்திருத்தலுக்கும் சேர்த்தே வழங்கப்படுவது. இதனை கொள்ளை லாபம் என்று வரையறை செய்யமுடியுமா?‘சாதா பொங்கலு’க்கு மேல் இரண்டு முந்திரிப்பருப்பையும், பாதாம்பருப்பையும் போட்டுவிட்டு, அதனை ‘ஸ்பெஷல் பொங்கல்’ என்று விலை கூட்டினால், அது கொள்ளை லாபம் என்ற வரையறைக்குள் வருமா?மேலும் தொழில் எதிரிகள் வேண்டுமென்றே, இந்த ஆணையத்தில், போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகள் மீது புகார்கள் கொடுத்து இம்சைப்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. இவற்றைக் கண்டுபிடிப்பது எப்படி? இதற்கான விடைகளை இந்த ஆணையம் தான் கண்டுபிடிக்கவேண்டும்.மக்கள் பலமே மகத்தானதுஅரசாங்கம் வழங்க விரும்பும்சலுகைகளை இடையிலுள்ள நிறுவனங்கள் கபளீகரம் செய்ய முனையும்போது, என்ன செய்யவது? இதற்குத் தீர்வு தான் என்ன?மக்களாகிய நாம் தான் இதற்கான தீர்வை வழங்கப் போகிறோம். ஆம், போட்டியும், சந்தையும், ஆதரவுமே வணிகர்களின் கண்ணைத் திறக்கும்.நீங்களும் நானும் வாங்கக்கூடிய விலையில், எங்கே தரமான பொருட்கள் கிடைக்கின்றனவோ, அதற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும். பிறவற்றைப் புறக்கணிக்க வேண்டும். புறக்கணிப்பின் வலி, வணிகர்களுக்கும் தொழில்துறையினருக்கும் நன்கு புரியும். இதுதான் சந்தையின் வலிமை.சந்தையைத் தீர்மானிப்பது வணிகர்கள் அல்ல, மக்களாகிய நாம் தான் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டால், விலைகள் சரியும், சேவைகளின் தரம் உயரும். ஜி.எஸ்.டி.,யின் பலன்கள் நம்மை வந்து சேரும்.– ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|