பதிவு செய்த நாள்
20 நவ2017
03:53
தங்கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த வாரம் உயர்ந்து, ஒரு மாத உச்சத்தை தொட்டது. சில வாரங்களாக, தங்கம் மற்றும் வெள்ளி விலையில், பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் வர்த்தகமாகியது.சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை ஓர் அவுன்ஸ், 1,262 – 1,285 டாலர் என்ற அளவிலும், வெள்ளி விலை, 17.70 – 17.20 டாலர் வரையிலும் இருந்தது.இந்த சூழலில், கடந்த வார இறுதி நாட்களான, வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில், விலையேற்றம் காணப்பட்டது. சர்வதேச சந்தையில், அமெரிக்க நாணயத்தின் விலை குறைவு, பங்குச் சந்தைகளின் தாக்கம் ஆகியவை, இந்த விலையேற்றத்துக்கு காரணம்.அமெரிக்க அதிபர் கொண்டு வந்துள்ள, புதிய வரி சீர்திருத்த முறைகள் மற்றும் வரி விகித குறைப்பு போன்ற நடவடிக்கைகள் குறித்து ஏற்பட்டுள்ள சஞ்சலம் காரணமாக, அமெரிக்க அரசு கருவூலங்கள், ஆதாயம் மிகுந்த சரிவை சந்தித்தது. இது, தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்தது.முதலீட்டாளர்கள், தங்களது முதலீட்டை கருவூலங்களில் குறைத்து, தங்கத்தில் முதலீடு செய்தனர்.பொதுவாகவே, தங்கம் ஒரு கனிமம் என்பதை காட்டிலும், ஒரு நாணயமாகவே கருதப்படுகிறது. எந்தவொரு அசாதாரணமான சூழலிலும், தங்கம் தான், ஒரு முதலீட்டு வாய்ப்பாக கருதி நுகரப்படுகிறது. ஆசிய நாடுகளில் மட்டுமே, ஆபரண தேவையாக, பெரியளவில் கருதப்படுகிறது. மற்ற நாடுகளில், தங்கம் வெறும் முதலீட்டுக்கான பொருளே.தங்கத்தை பொறுத்தவரை, வரும் நாட்களில், விலை உயர்ந்து காணப்பட வாய்ப்புள்ளது. இதற்கு, அமெரிக்க அதிபரின் தேர்தல் பேச்சு, ரஷ்யாவுடனான உறவு போன்றவை காரணமாக இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|