2 ரூபாய்க்கு 100 எம்.பி.: ‘வை பை டப்பா’ அதிரடி2 ரூபாய்க்கு 100 எம்.பி.: ‘வை பை டப்பா’ அதிரடி ... தங்கம் விலை சிறிது உயர்வு தங்கம் விலை சிறிது உயர்வு ...
வங்கி காசோலைக்கு வருகிறது, ‘வேட்டு’; பிரதமர் மோடியின் அடுத்த வியூகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2017
23:53

புதுடில்லி : ‘நாட்­டில், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­களை ஊக்­கு­விக்க, வங்கி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் காசோலை வச­தியை, மத்­திய அரசு திரும்­பப் பெறக் கூடும்’ என, இந்­திய வர்த்­த­கர்­கள் கூட்­ட­மைப்பு தெரி­வித்து உள்­ளது.


இந்த அமைப்­பின் தலை­வர், பிர­வீன் கந்­தல்­வால் பேசி­ய­தா­வது: பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு பின், ரொக்­கப் பரி­வர்த்­த­னை­கள் சற்று குறைந்­துள்ள நிலை­யில், காசோலை வாயி­லான பணப் பரி­மாற்­றம் அதி­க­ரித்­தி­ருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. அத­னால், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்க, வங்கி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான, காசோலை வச­தியை திரும்­பப் பெறு­வது குறித்து, மத்­திய அரசு ஆலோ­சிப்­ப­தாக தெரி­கிறது.


இத்­திட்­டம் அம­லா­னால், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை அதி­க­ரிக்­கும் என்­ப­து­டன், ரூபாய் நோட்­டு­கள் அச்­ச­டிக்­கும் செல­வும் கணி­ச­மாக குறை­யும். தற்­போது, மத்­திய அரசு, ரூபாய் நோட்­டு­களை அச்­ச­டிக்க, பல்­லா­யி­ரம் கோடி ரூபாயை செல­வ­ழிக்­கிறது. இத்­து­டன், பணப் போக்­கு­வ­ரத்து மற்­றும் பாது­காப்­பிற்­கா­க­வும், கோடிக்­க­ணக்­கில் செல­வி­டப்­ப­டு­கிறது. மின்­னணு பணப் பரி­வர்த்­தனை அதி­க­ரிக்க வேண்­டு­மென்­றால், இவ்­வகை பரி­வர்த்­த­னை­க­ளுக்கு, அரசு ஊக்­கத்­தொகை வழங்க வேண்­டும்.


தற்­போது, வணி­கர்­களின், ‘கிரெ­டிட்’ கார்டு பரி­வர்த்­த­னைக்கு, வங்­கி­கள், 2 சத­வீ­தம் செயல்­பாட்டு கட்­ட­ணம் வசூ­லிக்­கின்றன. இது, ‘டெபிட்’ கார்டு பரி­வர்த்­த­னைக்கு, 1 சத­வீ­த­மாக உள்­ளது. இந்த கட்­ட­ணத்தை, மத்­திய அரசு, நேர­டி­யாக வங்­கி­க­ளுக்கு செலுத்தி, வணி­கர்­களின் நிதிச்­சு­மையை குறைக்­க­லாம். இத­னால், சிறிய வணி­கர்­களும், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்கு மாறு­வர். இவ்­வாறு அவர் கூறி­னார்.


பிர­த­மர் மோடி, 2016 நவ., 8ல், பண மதிப்பு நீக்க அறி­விப்பை வெளி­யிட்­டார். இதை­ய­டுத்து ஏற்­பட்ட பணத் தட்­டுப்­பாடு கார­ண­மாக, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­கள் அதி­க­ரித்­தன. டிசம்­ப­ரில், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை, அதி­க­பட்­ச­மாக, 100 கோடியை எட்­டி­யது. இது, இந்தாண்டு செப்­டம்­ப­ரில், 87.70 லட்­ச­மாக குறைந்­துள்­ளது. இதை, நடப்பு நிதி­யாண்­டிற்­குள், 2.50 கோடி­யாக உயர்த்த, மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்­து உள்­ளது. ஆனால், தற்­போ­தைய சூழ­லில், இந்த இலக்கை எட்ட வாய்ப்­பில்லை என, தெரி­கிறது. எனவே, வங்கி காசோ­லைக்கு தடை விதிப்­பது, மின்­னணு பரி­வர்த்­த­னைக்கு மானி­யம் வழங்­கு­வது போன்­ற­வற்றை, மத்­திய அரசு செயல்­ப­டுத்த வாய்ப்­புள்­ளது. இது, பிர­த­மர் மோடி­யின் அடுத்த அதி­ரடி நட­வ­டிக்­கை­யாக இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


புழக்கம் குறைந்தது:

பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு முன், நாட்­டில், 17.90 லட்­சம் கோடி ரூபாய் உயர் மதிப்பு நோட்­டு­கள் புழக்­கத்­தில் இருந்­தன. இதில், 91 சத­வீ­தம், அதா­வது, 16.3 லட்­சம் கோடி ரூபாய், தற்­போது புழக்­கத்­தில் உள்­ளது. 2016 நவ., – 2017 செப்., வரை, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­கள், 31 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்ளன.
ரிசர்வ் வங்கி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)