பதிவு செய்த நாள்
22 நவ2017
23:55
புதுடில்லி : ‘‘நேரடி விற்பனை துறைக்கான மாதிரி விதிமுறைகளை, சிக்கிம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன,’’ என, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர், சி.ஆர்.சவுத்ரி தெரிவித்து உள்ளார்.
ஒரு நிறுவனம் தயாரிக்கும் பொருள், ஸ்டாக்கிஸ்ட், வினியோகஸ்தர், மொத்த விற்பனையாளர், சில்லரை விற்பனையாளர் என, பல நிலைகளை கடந்து தான், நுகர்வோரை அடைகிறது. இவ்வாறின்றி, ஒரு நிறுவனம், அதன் தயாரிப்பை நேரடியாக நுகர்வோருக்கு அளிப்பது, நேரடி விற்பனை எனப்படுகிறது.
ஆம்வே, ஹெர்பாலைப், டப்பர்வேர் உள்ளிட்ட நிறுவனங்கள், நேரடி விற்பனையில் ஈடுபடுகின்றன. இது போன்ற நிறுவனங்களின் பொருட்களை, கடைகளில் விற்பனை செய்ய, சட்டத்தில் இடமில்லை. எனினும், தெளிவான விதிமுறைகள் இல்லாததால், முறைகேடுகளை தடுக்க, நேரடி விற்பனைக்கு, தனி சட்டம் இயற்ற வேண்டும் என, தொழில் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டில்லியில், ‘அசோசெம்’ நிகழ்ச்சியில், சி.ஆர்.சவுத்ரி பேசியதாவது: நேரடி விற்பனைக்கு என, 2016ல், மாதிரி விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றை, சிக்கிம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன. தமிழகம், கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்கள், அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. புதிய விதிமுறைகளில், பன்னடுக்கு, ‘பிரமிட்’ முறை விற்பனை, பணப் பரிசு திட்டம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நேரடி விற்பனை முறைக்கு, தனிச் சட்டம் இயற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|