பதிவு செய்த நாள்
26 நவ2017
03:23
‘ஹோண்டா கார்ஸ் இந்தியா’ நிறுவனம், 2020 முதல், ஆறு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கு முன், ‘ஹைப்ரிட், எலக்ட்ரிக்’ வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, சென்னையில் பேசிய அந்நிறுவனத்தின், விற்பனை பிரிவு மூத்த துணைத் தலைவர், ஞானேஸ்வர் சென், ‘பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் கார்களை, இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கு திட்டமிட்டு உள்ளோம். மேலும், இந்தியாவில் விலை குறைவான கார்களை விரும்புவோர் அதிகம் என்பதால், அதற்கேற்ற செலவில், அவற்றை வாங்க வழிசெய்ய வேண்டும். அதற்கு ஆய்வு தேவைப்படுகிறது. மேலும், குறைவான எரிபொருள் மூலம் இயங்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த, ‘ஹைப்ரிட்’ ரக கார்களையும் அறிமுகப்படுத்த உள்ளோம். ஆனால், இந்த வகை கார்களுக்கு, மத்திய அரசு, ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும்’ என தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|