பதிவு செய்த நாள்
26 நவ2017
03:27
புதுடில்லி : மத்திய அரசு, ஆயத்த ஆடைகள் மற்றும் இல்லப் பயன்பாட்டு ஜவுளி வகைகளின் ஏற்றுமதிக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை, ௨ சதவீதம் உயர்த்தி உள்ளது.இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:எம்.இ.ஐ.எஸ்., எனப்படும், வர்த்தக மேம்பாட்டு திட்டத்தில், பல்வேறு பொருட்களின் ஏற்றுமதிக்கு, வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஏற்றுமதி செய்யும் நாடு மற்றும் பொருட்களை பொருத்து, 2 சதவீதம், 3 மற்றும் 5 சதவீதம் என்ற அளவில், ஏற்றுமதியாளர்கள் வரிச்சலுகைகளை பெறுகின்றனர்.ஜவுளித் துறையில், துணை பிரிவுகளான, ஆயத்த ஆடைகள் மற்றும்இல்லப் பயன்பாட்டு ஜவுளி வகைகள் ஏற்றுமதிக்கு, 2 சதவீத வரிச்சலுகை வழங்கப்பட்டது. இது தற்போது, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சலுகை, நவ., 1 முதல், 2018 ஜூன் வரை அமலில் இருக்கும்.இந்த சலுகை மூலம், அதிகளவில் தொழிலாளர்களை கொண்ட, ஆயத்த ஆடைகள் துறையின் ஏற்றுமதி அதிகரிக்கும். அது போல, இல்லம் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான ஜவுளி வகைகள் ஏற்றுமதியும் உயரும். இந்த இரு பிரிவுகளில், வேலைவாய்ப்புகளும் உருவாகும்.இந்த வரிச்சலுகைகளால், மத்திய அரசுக்கு, நடப்பு, 2017 -– 18ம் நிதியாண்டில், 1,143.15 கோடி ரூபாய் செலவாகும். 2018- – 19ம் நிதியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு, 685.89 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|