பதிவு செய்த நாள்
27 நவ2017
00:56
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி, கடந்த வாரம், 150 புள்ளிகள் அதிகரித்து, 10389 என்ற அளவில் வியாபாரம் முடிவுற்றது. இந்த மாத ஆரம்பத்தில் வரலாற்று உச்சம், 10490 புள்ளிகளை அடைந்திருந்தது. பின், சிறிய இறக்கம் கண்டு, தற்போது அதிலிருந்து மீண்டு வர்த்தகமாகிறது.
இந்த வாரத்தை பொறுத்தவரை, 30ம் தேதியன்று வெளிவர உள்ள மூன்று முக்கிய நிகழ்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளின் போக்கில் சந்தை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி விபரம், அடிப்படை துறைகளின் வளர்ச்சி மற்றும் எப் அண்டு ஓ செட்டில்மென்ட் போன்றவை குறித்த அறிக்கைகள் வர உள்ளன. முதல் காலாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.6 சதவீதம் என்பதிலிருந்து, இரண்டாவது காலாண்டில், 6.2 _6.3 சதவீதம் ஆக உயரும் என, எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொழில் துறையின் வளர்ச்சி, 1.6 சதவீதம் என்பதிலிருந்து, 5.5 சதவீதமாகவும், சேவை துறை வளர்ச்சி, 7.3 சதவீதத்திலிருந்து, 8.7 சதவீதமாகவும் உயரும் என கணிக்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதார பற்றாக்குறையை குறைக்க, மத்திய அரசு செலவினங்களை குறைத்துள்ளது. விவசாய வளர்ச்சியில் எதிர்பார்த்ததைவிட தொய்வு கூடுதலாக இருக்கும்.மேலும் சர்வதேச சந்தையில் வியாழன் அன்று ஒபெக் நாடுகளின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் உற்பத்தி குறைப்பு மீண்டும் ஒன்பது மாதங்களுக்கு அதிகரித்து, டிசம்பர், 2018 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எண்ணெய் விலை மீண்டும் உயரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. டிசம்பர், 1ம் தேதியன்று, நவம்பர் மாத வாகன விற்பனை விபரம் வர இருக்கிறது. மாருதியை தவிர மற்ற நிறுவனங்களின் விற்பனை குறைவாக இருக்கக்கூடும் என, கணிக்கப்படுகிறது.
வரும் புதன் அன்று, அமெரிக்க பொருளாதார காரணிகளில் ஒன்றான, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விபரம் வெளிவர இருக்கிறது. இது, 3 சதவீதத்திலிருந்து, 3.2 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள், அதன் தாக்கங்கள் நமது சந்தையில் எதிரொலிக்கும். சீன பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு மற்றும் தாக்கம் நமது சந்தையிலும் பிரதிபலித்தது. சீனாவின் கிரெடிட் ரேட்டிங்கில், ’எஸ் அண்டு பி 500’ மாற்றம் கொண்டுவரக்கூடும் என்ற செய்தியால், நமது சந்தையில் தாக்கம் பிரதிபலித்தது. இது சம்பந்தமாக வரும் நாட்களில் மேலும் ஏதேனும் அறிவிப்பு வரும் சூழலில், தாக்கம் மேலும் தொடரும். இந்த வாரம் நிப்டியை பொறுத்தவரை, ரெசிஸ்டெண்ட், 10490 மற்றும் 10570 ஆகும். சப்போர்ட், 10300 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ்ன், மெஹ்மானி ஆர்கானிக், எம்பி இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் காப்பர்ன், ரெப்கோ ஹோம் பைனான்ஸ்
-முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|