பதிவு செய்த நாள்
27 நவ2017
01:10
வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன் தவணையை குறித்த காலத்தில் திரும்ப செலுத்த தவறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான டிரான்ஸ் சிபில் நிறுவனம் வெளியிட்டு உள்ள ஆய்வு அறிக்கையில் சில்லரை கடன் பிரிவில், தவணையை செலுத்த தவறுபவர்களின் விகிதம் ஒட்டுமொத்த நோக்கில் நிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன் பிரிவில் மட்டும் இந்த எண்ணிக்கை ஓரளவு உயர்ந்துள்ளது. எனினும் தங்க கடன் மற்றும் இரு சக்கர வாகன கடன் பிரிவில் இது ஓரளவு குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் அமைப்பு களிடம் இருந்து கடன் பெற்றவர்கள் மத்தியிலும் இந்த எண்ணிக்கை லேசான உயர்வை கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடன் பிரிவில், இவை அதிகம் பங்கு வகிப்பது இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சில்லரை கடன் பிரிவில் அதிக கவனம் செலுத்தப்படும் நிலையில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இந்த பிரிவில் அதிக வளர்ச்சி கண்டுள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|