பதிவு செய்த நாள்
27 நவ2017
01:15
வங்கி கணக்கு, மியூச்சுவல் பண்ட், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நிதிச்சேவைகளை, ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியமாகும் நிலையில், இவற்றிற்கான கெடு பற்றி ஒரு பார்வை.
சமூக நலத்திட்டங்களுக்கான பலன் பெறுவது தவிர, பல்வேறு நிதிச்சேவைகளையும் ஆதார் அடை யாள எண்ணுடன் இணைப்பது, தவிர்க்க இயலாததாகி இருக்கிறது. ஏற்கனவே வங்கி சேமிப்பு கணக்கு, மியூச்சுவல் பண்ட் திட்ட முதலீடுகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் காப்பீட்டு திட்டங்களும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என, காப்பீட்டு ஆணையம் தெரிவித்து இருந்தது. முக்கிய நிதிச்சேவைகளை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவும் நெருங்கி கொண்டிருக்கிறது. எந்ததெந்த சேவைகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது குறித்து, ஒரு கண்ணோட்டம்.
முதலில் மொபைல்:
மற்ற சேவைகள் போலவே மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியமாகிறது. மொபைல் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு பிப்., 6ம் தேதி வரை, அவகாசம் இருந்தாலும், முதலில் மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து விடுவது நல்லது. ஏனெனில் மற்ற நிதிச்சேவைகளை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் போது, அதை நிறைவேற்ற தேவையான ஒரு முறை பாஸ்வேர்டை பெறுவது எளிதாக இருக்கும். ஆதாருடன் மொபைல் எண் அல்லது இ – மெயில் முகவரி இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்ப்பதற்கான வசதி, ஆதார் சேவைக்கான இணையத்தில் உள்ளது. இதன் மூலம், மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். https://goo.gl/rv7w3v இணைக்கப்படவில்லை எனில் முதலில் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதற்கான நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முதல், செல்போன் சேவை நிறுவன இணையதளத்திற்கு சென்று ஒரு முறை பாஸ்வேர்டை பெற்றுக் கொள்ளலாம். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு இது அனுப்பி வைக்கப்படும்.
இந்த பாஸ்வேர்டையும், ஆதார் எண்ணையும் சமர்ப்பித்தால் இணைப்பு அங்கீகரிக்கப்படும். ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் குரல் வழி சேவை வசதியும் இருக்கிறது.வங்கிசேவைகள்வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களுடனும் ஆதார் எண்ணை இணைக்க, டிச., 31 வரை அவகாசம் உள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க, கணக்கு வைத்துள்ள வங்கி கிளைக்கு நேரில் சென்று, உரிய படிவத்தை பூர்த்து செய்து வழங்கலாம். நெட் பேங்கிங் வசதி மூலம் இதை நிறைவேற்றலாம். எஸ்.எம்.எஸ்., மூலமான வசதியும் அளிக்கப்படுகிறது. இதே போல மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் இணைப்பை மியூச்சுவல் பண்ட் நிறுவன இணையதளம் அல்லது வினியோக சேவை அளிக்கும் நிறுவன இணையதளம் மூலம் நிறைவேற்றலாம். இந்த இணையதளங்களில் இதற்கான இணைப்பை காணலாம். மேலும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் அடிப்படையிலான கே.ஒய்.சி., இனி அவசியம்.இதே போலவே அஞ்சலக சேமிப்பு உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான முதலீடுகளும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும். பி.பி.எப்., கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.
காப்பீடு:
ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் தங்கள் ஆதார் எண் உரிய அஞ்சலக அலுவலகம் அல்லது வங்கி கிளையில் டிசம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைக்கப்படுவதும் கட்டாயமாகும்.பங்குச்சந்தை முதலீட்டிற்கும் ஆதார் இணைப்பு அவசியம். பங்கு முதலீட்டு புரோக்கரிடம் ஆதார் ஸ்கேன் செய்த நகலை அளிக்கலாம். அவரது இணையதளம் மூலம் ஆதார் எண்ணை அளிக்கலாம். காப்பீடு பாலிசிகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, பயண காப்பீடு உள்ளிட்டவற்றுக்கும் இது பொருந்தும். ஆதார் எண்ணின் ஸ்கேன் செய்த நகலை முகவர் அல்லது ஏஜன்ட் மூலம் சமர்ப்பிக்கலாம்.
ஆதார் இணைப்பு:
* வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்* மியூச்சுவல் பண்ட் முதலீடு உள்ளிட்ட நிதிச்சேவைகளை இணைப்பதும் அவசியம்* காப்பீடு பாலிசிகளை இணைப்பதும் அவசியமாகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|