பதிவு செய்த நாள்
28 நவ2017
00:04
ஐதராபாத் : ஐதராபாதில், சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை, பிரதமர் மோடி, இன்று துவக்கி வைக்கிறார்.
எரிசக்தி மற்றும் அடிப்படை கட்டமைப்பு; ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் வாழ்க்கை அறிவியல்; நிதி தொழில்நுட்பம் மற்றும், ‘டிஜிட்டல்’ பொருளாதாரம்; ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய நான்கு முக்கிய துறைகள் குறித்து, இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் மகளும், அவரது ஆலோசகருமான, இவாங்கா டிரம்ப் தலைமையிலான வர்த்தக குழு பங்கேற்கிறது.
இன்று இரவு, தற்போது ஓட்டலாக மாற்றப்பட்டுள்ள, பலக்னுமா அரண்மனையில் நடைபெறும் பிரமாண்ட விருந்தில், மோடி, இவாங்கா டிரம்ப் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 1,500க்கும் அதிகமான தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டையொட்டி, 10 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|