பதிவு செய்த நாள்
28 நவ2017
00:07
மும்பை : ‘‘சூரிய மின் சக்தி மானிய பயன்களை பெறுவதில், குஜராத், தமிழக விசைத்தறி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன,’’ என, ஜவுளித்துறை கமிஷனர், கவிதா குப்தா தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: நாட்டில் உள்ள, 25 லட்சம் விசைத்தறி நிறுவனங்களில், சரிபாதி, மஹாராஷ்டிராவில் உள்ளன. இத்துடன், 108 விசைத்தறி தொகுப்புகளும், 72 ஜவுளி பூங்காக்களும் உள்ளன. விசைத்தறி ஜவுளித் துறை மேம்பாட்டிற்கு, மத்திய அரசு, பல திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், அவை குறித்த விழிப்புணர்வு, அத்துறையில் போதிய அளவிற்கு இல்லை. அதே சமயம், இத்திட்டங்களில், குஜராத் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் அதிகபட்ச பயன்களை பெற்றுள்ளனர்.
சமீபத்தில் அறிமுகமான, சிறிய விசைத்தறி நிறுவனங்களின், சூரிய எரிசக்தி மானிய திட்டத்தில், ஒரு நிறுவனத்திற்கு, 2.50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம், மின் செலவு வெகுவாக குறையும் என்பதால், திட்டத்திற்கான வங்கிக் கடனை, 3 – 4 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தி விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|