சூரிய மின் சக்தி மானியத்தில் குஜராத், தமிழகம் முன்னிலைசூரிய மின் சக்தி மானியத்தில் குஜராத், தமிழகம் முன்னிலை ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.36 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.36 ...
இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க பிரிட்டன் நிறுவனங்கள் அதிக ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2017
00:09

புதுடில்லி : ‘இந்­தி­யா­வில், வர்த்­தக வாய்ப்­பு­கள் ஏரா­ள­மாக உள்­ள­தால், இங்கு பிரிட்­டன் நிறு­வ­னங்­கள் முத­லீ­டு­களை அதி­க­ரிக்க ஆர்­வம் காட்­டு­கின்றன’ என, பிரிட்­டன் இந்­திய வர்த்­தக கவுன்­சில் தெரி­வித்து உள்­ளது.


இது குறித்து, இந்­தியா மற்­றும் பிரிட்­ட­னைச் சேர்ந்த, 100 நிறு­வ­னங்­களை உறுப்­பி­ன­ராக கொண்ட, இக்­க­வுன்­சி­லின் குழு­மத் தலை­வர், ரிச்­சர்ட் ஹீல்டு, மேலும் கூறி­ய­தா­வது: இந்­தி­யா­வில், பெட்­ரோ­லி­யம், வங்கி, மருந்து உள்­ளிட்ட துறை­களில், பிரிட்­டன் நிறு­வ­னங்­கள் செயல்­ப­டு­கின்றன. இங்கு, ஏரா­ள­மான வர்த்­தக வாய்ப்­பு­கள் உள்ளன. வருங்­கா­லத்­தி­லும், வளர்ச்­சிக்­கான சூழல் பிர­மா­த­மாக உள்­ளது. இத­னால், இங்­குள்ள பிரிட்­டன் நிறு­வ­னங்­களில், பெரும்­பா­லா­னவை, அவற்­றின் முத­லீ­டு­களை அதி­க­ரிக்க திட்­ட­மிட்டு உள்ளன. தொழில் துவங்­கு­வ­தற்­கான ஆய்வை, பல நிறு­வ­னங்­கள் மேற்­கொண்டு உள்ளன.


இந்­தி­யா­வில், ஒரு­சில பிரி­வு­களில் தொழில் துவங்­கு­வது சுல­ப­மாகி உள்­ளது; மின் வசதி விரை­வாக கிடைக்­கிறது; மின்­னணு தொழில்­நுட்­ப­மும் பர­வ­லாகி உள்­ளது. எனி­னும், தொழில் துவங்­கு­வதை மேலும் சுல­ப­மாக்­கும் வகை­யில், பல பிரி­வு­களை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். அரசு, தொழில் துவங்­கு­வ­தற்­கான கட்­டுப்­பா­டு­களை தளர்த்தி உள்­ளது. ஆனால், இந்த தாரா­ள­ம­ய­மாக்­கல், ஒரே சீராக இல்லை. ஆட்­சி­யில் உள்­ளோ­ரும், மூத்த அதி­கா­ரி­களும், தொழில் துவங்­கு­வதை சுல­ப­மாக்­கு­வ­தில் தீவி­ர­மாக உள்­ள­னர். ஆனால், அப்­ப­ணி­களின் செய­லாக்­கம், கீழ்­மட்­டத்­தில் எதிர்­பார்த்த அள­விற்கு திருப்­தி­க­ர­மாக இல்லை என்­பது, எங்­கள் அமைப்­பின் ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.


எனி­னும், ஒட்­டு­மொத்த அள­வில், இந்­தி­யா­வில் தொழில் துவங்­கு­வது,முன் இருந்­ததை விட, தற்­போது சுல­ப­மாகி உள்­ளது. தொழில் புரி­வ­தற்கு சாத­க­மான சூழலை ஏற்­ப­டுத்த, மத்­திய அரசு பல்­வேறு சீர்­தி­ருத்த திட்­டங்­களை அறி­வித்­துள்­ளது. ஆனால், அத்­திட்­டங்­களின் செய­லாக்க வேக­மும், சீர்­தி­ருத்­தங்­களை அம­லாக்­கு­வ­தில் காணப்­படும் தாம­த­மும், கவலை அளிப்­ப­தாக உள்ளன. இந்­தி­யா­வி­டம் இருந்து, பிரிட்­டன் நிறு­வ­னங்­கள் கற்­றுக் கொள்ள ஏரா­ள­மாக உள்ளன. அத­னால் தான் அவை, இந்­தி­யா­வில் முத­லீடு செய்ய வரு­கின்றன. இவ்­வாறு அவர் கூறி­னார்.


முன்னணி நிறுவனங்கள்:

பிரிட்­ட­னைச் சேர்ந்த, கேட்­பரி இந்­தியா, பிரிட்­டிஷ் டெலி­காம், எச்.எஸ்.பி.சி., ஜி.எஸ்.கே பார்­மா­சூட்­டிக்­கல்ஸ், ஐ.சி.ஐ., இந்­தியா, ராய்ட்­டர்ஸ், ஸ்டாண்­டர்டு சார்ட்­டர்டு வங்கி, ஷெல் இந்­தியா, மார்க்ஸ் அண்டு ஸ்பென்­சர், பி அண்டு ஓ போர்ட்ஸ் உள்­ளிட்ட முன்­னணி நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் செயல்­ப­டு­கின்றன.


தனித்துவமான நல்லுறவு:

பிரிட்­டன், இந்­தி­யா­வு­டன் தனிச் சிறப்­பு­மிக்க நல்­லு­றவை கொண்­டுள்­ளது. இது, ஐரோப்­பிய கூட்­ட­மைப்­பில் இருந்து பிரிட்­டன் வெளி­யே­றிய பின், மேலும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த தனிச் சிறப்­பு­மிக்­க­தாக இருக்­கும்.
-ரிச்சர்ட் ஹீல்டு, பிரிட்டன் இந்திய வர்த்தக கவுன்சில் குழுமத் தலைவர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)