பதிவு செய்த நாள்
28 நவ2017
11:00
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 700 டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர், பிரவிண் சங்கர் பாண்ட்யா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: வளைகுடா நாடான துபாயில், வரும், 2018, ஜனவரி முதல், 5 சதவீத வாட் வரி விதிப்பு முறை அமல்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. வளைகுடா நாடுகளில், தங்கம், வைர நகைகளுக்கு, 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இவற்றால், நம் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு, 49 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நமது ஏற்றுமதியில், 50 சதவீதம் துபாய் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. தங்கம் இறக்குமதிக்கான வரி, 10 சதவீதமாக உள்ளது. இந்த தொழிலில் உள்ள மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வரும் பட்ஜெட்டில், இதை, 4 முதல், 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
கடந்த, 2016-17 நிதியாண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி, 500 டன்னாக இருந்தது. அது, நடப்பு நிதியாண்டில், 700 டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|