பதிவு செய்த நாள்
28 நவ2017
23:51
புதுடில்லி : இணைய சமநிலை பயன்பாட்டிற்கு, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ ஆதரவு தெரிவித்து, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்து உள்ளது.
அதன் விபரம்: இணையம், ஒரு திறந்தவெளி பயன்பாட்டு தளம். அதனால், இணையம் சார்ந்த சேவைகளை வழங்குவதில், பாரபட்சம் காட்டக் கூடாது. ஒவ்வொருவரும் இணைய சேவையை சமமாக பெற வேண்டும். அதில், சிறப்பு சேவை தருவதாகக் கூறி, பயன்படுத்துவோர் இடையே பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது. இதில், ஐ.ஓ.டி., எனப்படும், இணையம் சார்ந்த சாதன செயல்பாடுகளுக்கான சேவையும் அடங்கும்.
நிறுவனங்கள் அளிக்கும் இணைய சேவை, அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். அதில், பாரபட்சத்திற்கு வழிவகுக்கும் செயல்பாடுகள் தொடர்பாக, இணைய சேவை நிறுவனங்கள், பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது. இணைய சேவை உரிமம் குறித்த விதிமுறைகளில், பாரபட்ச மற்ற செயல்பாடுகள் குறித்த அம்சங்களையும் சேர்க்க வேண்டும். தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், இணைய சேவையின் வேகம், தரம் உள்ளிட்ட விபரங்களை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|