பதிவு செய்த நாள்
28 நவ2017
23:52
மும்பை : பெண் தொழில் முனைவோரின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய, ‘அமேசான் இந்தியா’ வலைதளத்தில், தனி பிரிவு துவக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, ‘அமேசான் இந்தியா’ நிறுவனத்தின் இயக்குனர், கோபால் பிள்ளை கூறியதாவது: சிறு தொழில் புரிவோரின் தயாரிப்புகளை பலரும் அறிய, சந்தைப்படுத்தி, அவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது, அமேசான் நிறுவனத்தின் முக்கிய நோக்கம். அதன்படி தற்போது, பெண் தொழில் முனைவோரின் பொருட்களுக்கு என, பிரத்யேகமாக, ‘அமேசான் சாஹலி’ என்ற பிரிவை துவக்கி உள்ளோம். இதில், பெண் கைவினைஞர்களின் கைவினைப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், கைப் பைகள், வீட்டு அலங்கார பொருட்கள் ஆகியவை இடம் பெறும்.
இதற்காக, மகளிர் சுயஉதவிக் குழுவான, ‘சேவா, இம்பல்ஸ் சோஷியல் என்டர்பிரைஸ்’ உள்ளிட்ட அமைப்புகளுடன், அமேசான் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த அமைப்புகளில் உறுப்பினராக உள்ள, பெண் தொழில் முனைவோரின் பொருட்கள், ‘அமேசான் சாஹலி’யில் இடம் பெறும். இப்பொருட்களை சந்தைப்படுத்தி, நுகர்வோரிடம் சேர்ப்பதற்கான அனைத்து செயல்பாடு களும், சம்பந்தப்பட்ட அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|