பதிவு செய்த நாள்
28 நவ2017
23:53
புதுடில்லி : ‘விமான பயணத்தை ரத்து செய்வோரிடம், 3,000 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்’ என, சில தனியார் விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதற்கு, விமான பயணியரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், ஜெயந்த் சின்ஹா கூறியதாவது: உள்ளூர் விமான போக்குவரத்தில் ரத்து செய்யப்படும் டிக்கெட்டிற்கு, 3,000 ரூபாய் பிடித்தம் செய்யும் திட்டத்தை, விமான சேவை நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு, சாதாரண மக்களும் விமான பயணம் மேற்கொள்ள, ‘உதான்’ திட்டத்தை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில், குறைந்த பட்சமாக, விமான பயணக் கட்டணம், 2,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதை விட அதிகமாக, சில தனியார் விமான நிறுவனங்கள், பயணத்தை ரத்து செய்வதற்கான கட்டணத்தை நிர்ணயித்து உள்ளன. உடனடியாக, விமான பயண ரத்து கட்டணத்தை, விமான சேவை நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும். விமான சேவை நிறுவனங்களிடம் அரசு பேச்சு நடத்தி, நியாயமான கட்டணம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|